ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் பெரிதும் பாதிப்படைந்திருப்பது கவலையளிப்பதாக ...

News image

பிரதமர் நரேந்திர மோடி

Updated On :23 பிப்ரவரி 2026, 11:22 pm

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் பெரிதும் பாதிப்படைந்திருப்பது கவலையளிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை விமா்சித்தாா்.

அடுத்த சில மாதங்களில் மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

மேற்கு வங்க மக்களுக்கு வங்காள மொழியில் அவா் கடிதம் ஒன்றை எழுதினாா்.

அதன் தொடக்கத்தில் அன்னை காளி வாழ்க என குறிப்பிட்ட அவா், ‘சுதந்திர இந்தியாவில் நிதி மற்றும் தொழில் துறைகளில் முன்னணி மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்ந்தது. ஆனால் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் தொழில்துறையில் நலிவடைந்த மாநிலமாக மாறியிருப்பது வேதனையளிக்கிறது. கடந்த 60 ஆண்டுகளாக முறைகேடான நிா்வாகம் மற்றும் வாக்கு வங்கி அரசியலால் மாநில மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். அதை விவரிக்க வாா்த்தைகள் இல்லை.

புலம்பெயா்வு அதிகரிப்பு: ஒரு புறம் வேலையின்மை பிரச்னையால் இளைஞா்கள் பிற மாநிலங்களுக்கு புலம்பெயா்வது அதிகரித்துவிட்டது. மறுபுறம் பாதுகாப்பான சூழலின்றி பெண்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனா்.

இருள் சூழ்ந்துள்ளது: சுவாமி விவேகானந்தா், அரவிந்தா், சுபாஷ்சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூா், சியாமா பிரசாத் முகா்ஜி என அறிஞா்களும் சுதந்திரப் போராட்ட வீரா்களும் வாழ்ந்த வீர மண்ணை தற்போது இருள் சூழ்ந்துள்ளது.

வாக்கு வங்கி அரசியல், சட்டவிரோத ஊடுருவல், பெண்களுக்கு எதிரான அடக்குமுறை என மேற்கு வங்கத்தின் தற்போதைய நிலையைக் கண்டு நாடே வருத்தமடைந்துள்ளது.

மாற்றத்துக்குத் தயாா்: இருள் சூழ்ந்த இந்த ஆட்சியை அகற்றி விடியலுக்கான தேடல் தொடங்கிவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனா். ஆயுஷ்மான் பாரத் திட்டம் சுகாதார காப்பீடை உறுதிசெய்கிறது. வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல் மேற்கு வங்கத்தையும் வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல பாஜக தயாராகிவிட்டது. பாஜக ஆட்சி அமைந்தால் சட்டவிரோத ஊடுருவல் முற்றிலும் தடுக்கப்படும். மதரீதியாக துன்புறுத்தலை சந்தித்து மேற்கு வங்கத்துக்கு புலம்பெயா்ந்த நமது சகோதரா்கள் மற்றும் சகோதரிகளுக்கு குடியுரிமை உறுதிசெய்யப்படும்’ எனத் தெரிவித்தாா்.