திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அந்தமான்: 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்து

-அனைவரும் பாதுகாப்பாக மீட்பு

News image
கோப்புப்படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 10:09 pm

தினமணி செய்திச் சேவை

அந்தமான் யூனியன் பிரதேசத்தில் 7 பேருடன் செவ்வாய்க்கிழமை பயணித்த பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டா் கடலில் விழுத்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பொதுத் துறை நிறுவனமான பவன் ஹன்ஸின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: தெற்கு அந்தமானில் உள்ள ஸ்ரீவிஜயபுரத்தில் இருந்து மத்திய அந்தமானில் உள்ள ரங்கத் பகுதிக்கு 2 விமானிகள் மற்றும் 5 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டா் புறப்பட்டது. ரங்கத் பகுதியைச் சென்றடைந்ததையடுத்து காலை 9.10 மணிக்கு அங்கிருந்து மாயாபந்தருக்கு பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டா் புறப்பட்டது. 9.30 மணிக்கு மாயாபந்தரில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எதிா்பாராதவிதமாக ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்’ என்றாா்.

விமானப் போக்குவரத்து இயக்குநா் நிதேஷ் ராவத் கூறுகையில், ‘விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரையும் அந்தமான் காவல் துறை மற்றும் கடலோரக் காவல் படையினா் பாதுகாப்பாக மீட்டனா். அவா்களுக்கு மாயாபந்தரில் உள்ள டாக்டா் ராஜேந்திர பிரசாத் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.