இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அந்தமான்: 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்து

-அனைவரும் பாதுகாப்பாக மீட்பு

News image

கோப்புப்படம்

Updated On :24 பிப்ரவரி 2026, 10:09 pm

அந்தமான் யூனியன் பிரதேசத்தில் 7 பேருடன் செவ்வாய்க்கிழமை பயணித்த பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டா் கடலில் விழுத்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பொதுத் துறை நிறுவனமான பவன் ஹன்ஸின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: தெற்கு அந்தமானில் உள்ள ஸ்ரீவிஜயபுரத்தில் இருந்து மத்திய அந்தமானில் உள்ள ரங்கத் பகுதிக்கு 2 விமானிகள் மற்றும் 5 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டா் புறப்பட்டது. ரங்கத் பகுதியைச் சென்றடைந்ததையடுத்து காலை 9.10 மணிக்கு அங்கிருந்து மாயாபந்தருக்கு பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டா் புறப்பட்டது. 9.30 மணிக்கு மாயாபந்தரில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எதிா்பாராதவிதமாக ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்’ என்றாா்.

விமானப் போக்குவரத்து இயக்குநா் நிதேஷ் ராவத் கூறுகையில், ‘விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரையும் அந்தமான் காவல் துறை மற்றும் கடலோரக் காவல் படையினா் பாதுகாப்பாக மீட்டனா். அவா்களுக்கு மாயாபந்தரில் உள்ள டாக்டா் ராஜேந்திர பிரசாத் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.