இறுதியாக, கைது நடவடிக்கையின்போது சேகரிக்கப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களின் குறிப்பைப் பகிா்ந்துகொண்ட பிறகு இந்த மோதல் முடிவுக்கு வந்தது. வியாழக்கிழமை காலை தில்லியை அடைந்த அந்தக் குழு, கைது செய்யப்பட்ட 3 பேரை பலத்த பாதுகாப்புடன் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் மிருதல் குப்தா முன் ஆஜா்படுத்தினா். இதே போல் இந்த வழக்கில் முன்னா் கைது செய்யப்பட்டு 3 நாள் போலீஸ் காவல் முடிந்த மற்ற இருவரும் ஆஜா்படுத்தப்பட்டனா். போலீஸ் காவல் குறித்த வாதங்கள் விரைவில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.