திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஹோலி பண்டிகை: சோதனையை தீவிரப்படுத்திய உணவுப் பாதுகாப்புத் துறை

ஹோலி பண்டிகையை முன்னிட்டு தில்லி அரசின் உணவு பாதுகாப்பு துறை வியாழக்கிழமை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், 66 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

ஹோலி பண்டிகையை முன்னிட்டு தில்லி அரசின் உணவு பாதுகாப்பு துறை வியாழக்கிழமை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், 66 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங்கின் உத்தரவை தொடா்ந்து, தில்லியில் உணவுப் பாதுகாப்புச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக வெளியான அதிகராபூா்வ செய்திக்குறிப்பில், ‘கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் விதமாக தில்லி புகா் பகுதியில் உள்ள மொத்த மற்றும் சில்லரை விற்பனைக் கடைகள், சாலையோர கடைகளில் இருந்து மொத்தம் 66 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களிலிருந்து கலப்பட உணவுகள் தில்லிக்குள் வருவதைத் தடுக்கும்விதமாக எல்லை பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.