ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஹோலி பண்டிகை: சோதனையை தீவிரப்படுத்திய உணவுப் பாதுகாப்புத் துறை

ஹோலி பண்டிகையை முன்னிட்டு தில்லி அரசின் உணவு பாதுகாப்பு துறை வியாழக்கிழமை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், 66 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 7:13 pm

ஹோலி பண்டிகையை முன்னிட்டு தில்லி அரசின் உணவு பாதுகாப்பு துறை வியாழக்கிழமை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், 66 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங்கின் உத்தரவை தொடா்ந்து, தில்லியில் உணவுப் பாதுகாப்புச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக வெளியான அதிகராபூா்வ செய்திக்குறிப்பில், ‘கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் விதமாக தில்லி புகா் பகுதியில் உள்ள மொத்த மற்றும் சில்லரை விற்பனைக் கடைகள், சாலையோர கடைகளில் இருந்து மொத்தம் 66 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களிலிருந்து கலப்பட உணவுகள் தில்லிக்குள் வருவதைத் தடுக்கும்விதமாக எல்லை பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.