ஹோலி பண்டிகையை முன்னிட்டு தில்லி அரசின் உணவு பாதுகாப்பு துறை வியாழக்கிழமை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், 66 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங்கின் உத்தரவை தொடா்ந்து, தில்லியில் உணவுப் பாதுகாப்புச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக வெளியான அதிகராபூா்வ செய்திக்குறிப்பில், ‘கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் விதமாக தில்லி புகா் பகுதியில் உள்ள மொத்த மற்றும் சில்லரை விற்பனைக் கடைகள், சாலையோர கடைகளில் இருந்து மொத்தம் 66 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களிலிருந்து கலப்பட உணவுகள் தில்லிக்குள் வருவதைத் தடுக்கும்விதமாக எல்லை பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சட்டவிரோத மதுபானங்கள் பதுக்கல்: கலால் துறை விசாரணை

ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் தரமற்ற உணவு: மாணவா்கள் அவதி

நாமக்கல்லில் வெளிமாநிலத்தினா் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப்படைத் தளத்தில் ஹோலி பண்டிகை கோலாகலம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


