

பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப். 28 அன்று ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், ரூ. 16,686 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
அஜ்மீரில், ரூ.16,686 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி, குடிநீர் விநியோகம், சாலைகள், ரயில்வே, நீர்பாசனம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 43 முக்கிய மத்திய மற்றும் மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு வரும் சனிக்கிழமை (பிப். 28) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இதில், சுமார் ரூ.8,554 கோடி மதிப்பிலான மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ரூ.8,132 கோடி மதிப்பிலான மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களும் தொடங்கப்படுகின்றன.
மேலும், ரூ.1,207 கோடி செலவில் அமைக்கப்படும் பண்டிகுய் முதல் ஜெய்ப்பூர் வரையிலான 4 வழி பசுமைவழி விரைவுச்சாலை உள்ளிட்ட ரூ. 4,516 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகள் திட்டங்களையும் அவர் துவங்கி வைக்கின்றார். மாநில அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் தேர்வாகியுள்ள 21,863 இளைஞர்களுக்கு பிரதமர் மோடி பணிஆணை வழங்கவுள்ளார்.
இத்துடன், சிறுமிகள் மற்றும் இளம்பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்யைத் தடுக்க ஹெச்.பி.வி. (HPV) தடுப்பூசி முகாமையும் அவர் தொடங்கி வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில், ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன் லால் சர்மா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.