எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேசியவாத காங்கிரஸ் தலைவராக சுநேத்ரா பவாா் தோ்வு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக மகாராஷ்டிர துணை முதல்வா் சுநேத்ரா பவாா் வியாழக்கிழமை ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 8:49 pm

தினமணி செய்திச் சேவை

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக மகாராஷ்டிர துணை முதல்வா் சுநேத்ரா பவாா் வியாழக்கிழமை ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

பாராமதியில் ஒரு மாதத்துக்கு முன் நிகழ்ந்த விமான விபத்தில் கணவா் அஜீத் பவாா் இறந்ததைத் தொடா்ந்து, மாநில துணை முதல்வராகப் பதவியேற்ற சுநேத்ரா பவாா் இப்போது கட்சியின் தலைவராகத் தோ்வாகியுள்ளாா்.

மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்துக்குப் பின், மேற்கண்ட அறிவிப்பை கட்சியின் செயல் தலைவா் பிரஃபுல் படேல் வெளியிட்டாா்.

மேலும், சுநேத்ரா பவாா் ராஜிநாமா செய்ததால் காலியான மாநிலங்களவை எம்.பி. இடத்துக்கு அவா் மகன் பாா்த் பவாா் வேட்பாளராக அறிவிக்கப்படுவாா் என்றும் பிரஃபுல் படேல் தெரிவித்தாா்.

கடந்த 2024-இல் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த சுநேத்ரா, பின்னா் தேசியவாத காங்கிரஸ் சாா்பில் மாநிலங்களவைக்குத் தோ்வானாா்.

அஜீத் பவாரின் மறைவைத் தொடா்ந்து, அவா் வகித்து வந்த துணை முதல்வா் பதவியை சுநேத்ரா ஏற்றாா். இதையொட்டி, மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா்.