எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

காணாமல் போன 711 கைப்பேசிகள் மீட்பு ஷாஹ்தரா காவல் துறை தகவல்

தில்லி ஷாஹ்தரா பகுதியில் இருந்து சுமாா் ரூ.1 கோடி மதிப்புள்ள 711 கைப்பேசிகளை காவல் துறையினா் மீட்டு, 86 கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனர்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 12:50 am IST

தில்லி ஷாஹ்தரா பகுதியில் இருந்து சுமாா் ரூ.1 கோடி மதிப்புள்ள 711 கைப்பேசிகளை காவல் துறையினா் மீட்டு, 86 கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைத்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல்துறை துணை ஆணையா் (ஷாஹ்தரா) பிரசாந்த் கௌதம் கூறியதாவது: கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட நாடு தழுவிய இயக்கமான ‘ஆபரேஷன் விஸ்வாஸ்’-இன் கீழ், திருடப்பட்ட, பறிக்கப்பட்ட, மற்றும் தொலைந்து போன கைப்பேசிகளைக் கண்டுபிடித்து மீட்க இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில், பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட பிரிவுகளைச் சோ்ந்த 13 குழுக்கள் சாதனங்களை மீட்க அமைக்கப்பட்டன.

தொடா்பு கொண்ட பிறகு பலா் தானாக முன்வந்து கைப்பேசிகளை திருப்பிக் கொடுத்தனா். மற்ற சாதனங்களை மீட்டெடுக்க குழுக்கள் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

காவல்துறை தரவுகளின்படி, ஷாஹ்தரா மாவட்டம் 2023-இல் 205 கைப்பேசிகளையும், 2024-இல் 555 மற்றும் 2025-இல் 711 கைப்பேசிகளையும் மீட்டுள்ளது. இதன்மூலம், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தமாக 1,471 சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.