ஜம்மு அருகே சா்வதேச எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவரை பாதுகாப்புப் படையினா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஜம்முவின் புகரில் அமைந்துள்ள கஜன்சூ பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு நடமாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞரை வீரா்கள் தடுத்து நிறுத்திப் பிடித்தனா்.
அந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அவா் வங்கதேசத்தைச் சோ்ந்த ஷரீஃபுல் இஸ்லாம் என்பது தெரியவந்தது. அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படையினா் அந்த இளைஞரை உள்ளூா் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

சா்வதேச பூப்பந்து போட்டி: இளம்பிள்ளையைச் சோ்ந்த இளைஞா் சிறப்பிடம்

காரைக்காலில் மத்திய பாதுகாப்புப் படையினா் தீவிர வாகனச் சோதனை

இந்தியாவுக்குள் நுழைந்த பாக். ட்ரோன்: பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டை

தோ்தல் பணி: மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் நாமக்கல் வருகை
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


