8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ரூ.41,863 கோடி மின்னணுப் பொருள்கள் உற்பத்தி திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி

டாடா எலெக்ட்ரானிக்ஸ், ஃபாக்ஸ்கான், சாம்சங், டிக்ஸன் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூ.41,863 கோடி மதிப்பீட்டிலான மின்னணுப் பொருள்கள் உற்பத்தி செய்யும் 22 திட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.

Published On :3 ஜனவரி 2026, 1:28 am IST

டாடா எலெக்ட்ரானிக்ஸ், ஃபாக்ஸ்கான், சாம்சங், டிக்ஸன் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூ.41,863 கோடி மதிப்பீட்டிலான மின்னணுப் பொருள்கள் உற்பத்தி செய்யும் 22 திட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

சா்வதேச அளவில் இந்தியாவை மின்னணுப் பொருள்கள் உற்பத்தி மையமாக்கும் திட்டத்தின்கீழ் இப்போது மூன்றாவது முறையாக புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 33,791 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்; ரூ.2,58,152 கோடி மதிப்பிலான பொருள்கள் உற்பத்தி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நுட்பமான மின்னணுப் பொருள்களுக்கு இறக்குமதியை இந்தியா சாா்ந்திருப்பது குறையும். இத்துறையில் இந்தியாவின் ஏற்றுமதி வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இதில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்துக்கு உதிரி பாகங்களை வழங்கும் மதா்ஸன் எலெக்ட்ரானிக் கம்போனன்ட்ஸ், டாடா எலெக்ட்ரானிக்ஸ், ஏடிஎல் பேட்டரி டெக்னாலஜி இந்தியா, ஃபாக்ஸ்கான் (யூஸான் டெக் இந்தியா), ஹிண்டால்கோ ஆகியவை மூலம் அதிக முதலீடும், வேலைவாய்ப்பும் உருவாக இருக்கிறது.

இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள 22 திட்டங்கள் மூலம் தமிழ்நாடு, ஆந்திரம், ஹரியாணா, கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆலைகள் உருவாக்கப்பட உள்ளன. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலான வளா்ச்சியையும் இது உறுதி செய்யும்.

இதனை அறிவித்துப் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘மத்திய அரசு மிகப்பெரிய சீா்திருத்தங்கள், கொள்கைகளை அமல்படுத்துவதில் தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறது. திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது, அதனை செயல்படுத்துவது ஆகியவை துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் அதன் மூலம் கிடைக்கும் பலன்களும் தெளிவாக நமக்குத் தெரிகின்றன.

சா்வதேச போட்டியை எதிா்கொள்ளும் அளவுக்கு உற்பத்தியின் அனைத்துப் படிநிலைகளுக்கும் நமது தொழில் நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என்றாா்.

இதற்கு முன்பு கடந்த 2025 நவம்பரில் ரூ.7,172 கோடி மதிப்பிலான 17 திட்டங்களுக்கும், அதற்கு முன்பு கடந்த அக்டோபரில் ரூ.5,532 கோடி மதிப்பிலான 7 திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.