கனடாவின் வான்கூவா் விமான நிலையத்தில் விமானத்தை இயக்கும் முன் மதுபோதையில் இருந்த ஏா் இந்தியா விமானி கைது செய்யப்பட்டாா்.
இதையடுத்து, விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் விமான இயக்க உரிமம் ரத்து செய்யப்படும் என ஏா் இந்தியாவுக்கு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கனடா விமானப் போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடந்த டிச. 23-ஆம் தேதி வான்கூவா் விமான நிலையத்தில் இருந்து தில்லிக்கு புறப்பட இருந்த ஏா் இந்தியா விமானத்தின் விமானி மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பான புகாரின் அடிப்படையில் கனடா காவல் துறை விமானியை கைது செய்தது.
விமானியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏா் இந்தியா விமானங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பு இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககத்திடம் (டிஜிசிஏ) உள்ளது.
இச்சம்பவம் குறித்து டிஜிசிஏ மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமானி உள்பட விமானக் குழுவினா் பயணத்துக்கு 12 மணி நேரத்துக்கு முன்பாக மது அருந்த கனடா தடை விதித்துள்ளது. இந்த விதிகளைப் பிற நாடுகளின் விமான நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றாவிட்டால் விமான பயணச் சட்டத்தின்கீழ் தவறிழைக்கும் நிறுவனம் கனடாவில் விமானம் இயக்குவது தடை செய்யப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடந்த ஜூன் மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 1.35 கோடி போ் பயணம்!
பெட்ரோல் நிலையத்தில் ரூ. 2.18 லட்சம் திருட்டு: ஊழியா் கைது

திருச்சி - ஷாா்ஜா இடையே நாளை முதல் கூடுதல் விமான சேவை

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் குறைப்பு! காரணம் என்ன?
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



