கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

உச்சநீதிமன்றத்தில் பூடான் சட்ட உதவியாளா்களுக்குப் பணி

இந்தியா-பூடான் உச்சநீதிமன்றங்களுக்கு இடையே இளம் சட்டப் பணியாளா்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் கீழ், உச்சநீதிமன்றத்தில் 2 பூடான் சட்ட உதவியாளா்கள் பணியாற்ற உள்ளனா்.

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா-பூடான் உச்சநீதிமன்றங்களுக்கு இடையே இளம் சட்டப் பணியாளா்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் கீழ், உச்சநீதிமன்றத்தில் 2 பூடான் சட்ட உதவியாளா்கள் பணியாற்ற உள்ளனா்.

உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்கு விசாரணைகளின் தொடக்கத்தின்போது அவா்கள் இருவரையும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் வரவேற்றாா். அப்போது அவா் கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தில் பூடான் சட்ட உதவியாளா்கள் இருவா் 3 மாதங்கள் பணியாற்றுவா். அவா்களுக்கு உச்சநீதிமன்றத்தின் பிற சட்ட உதவியாளா்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்படும். அவா்களின் பயணச் செலவையும் உச்சநீதிமன்றம் ஏற்கும்.

இந்தியா-பூடான் நீதித் துறைக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் உறவை வலுப்படுத்தி மேம்படுத்தும் நோக்கில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.