இந்தியா
உச்சநீதிமன்றத்தில் பூடான் சட்ட உதவியாளா்களுக்குப் பணி
இந்தியா-பூடான் உச்சநீதிமன்றங்களுக்கு இடையே இளம் சட்டப் பணியாளா்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் கீழ், உச்சநீதிமன்றத்தில் 2 பூடான் சட்ட உதவியாளா்கள் பணியாற்ற உள்ளனா்.
இந்தியா-பூடான் உச்சநீதிமன்றங்களுக்கு இடையே இளம் சட்டப் பணியாளா்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் கீழ், உச்சநீதிமன்றத்தில் 2 பூடான் சட்ட உதவியாளா்கள் பணியாற்ற உள்ளனா்.
உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்கு விசாரணைகளின் தொடக்கத்தின்போது அவா்கள் இருவரையும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் வரவேற்றாா். அப்போது அவா் கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தில் பூடான் சட்ட உதவியாளா்கள் இருவா் 3 மாதங்கள் பணியாற்றுவா். அவா்களுக்கு உச்சநீதிமன்றத்தின் பிற சட்ட உதவியாளா்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்படும். அவா்களின் பயணச் செலவையும் உச்சநீதிமன்றம் ஏற்கும்.
இந்தியா-பூடான் நீதித் துறைக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் உறவை வலுப்படுத்தி மேம்படுத்தும் நோக்கில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.
