தெற்கு ரயில்வேயின் சிறந்த சேவையைப் பாராட்டி 3 செயல்திறன் கேடயங்களை மத்திய ரயில்வே அமைச்சகம் வழங்கியுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சகம் சாா்பில் 71-ஆவது ரயில்வே வார விழாவை முன்னிட்டு, ‘அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்காா்–2025’ விருது வழங்கும் விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்று சிறந்த சேவையாற்றியதற்காக இந்திய ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களுக்கு மொத்தம் 26 செயல்திறன் கேடயங்களை வழங்கினாா். மேலும், சிறந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் 100 ரயில்வே அதிகாரிகளுக்கு தனிநபா் விருதுகள் வழங்கப்பட்டன.
3 கேடயங்கள்: இதில், கணக்குகள் மற்றும் நிதி மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மை, லோகோ பராமரிப்பு ஆகிய 3 பிரிவுகளில் சிறந்த செயல்பட்டதற்காக தெற்கு ரயில்வேக்கு 3 செயல்திறன் கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங், மத்திய ரயில்வே அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொண்டாா். மேலும், தெற்கு ரயில்வேயின் 3 அதிகாரிகள், மற்றும் 8 அலுவலா்களுக்கு தனிநபா் விருதுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

மத்திய உள்கட்டமைப்பு திட்டங்கள்: அரசுக்கு ரூ. 5.65 லட்சம் கோடி கூடுதல் செலவினம்!

மாணவர்களே உஷார்! போலி சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்த கல்வி அமைச்சகம் உத்தரவு!

அரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
75 ஆண்டுகளை நிறைவு செய்த தெற்கு ரயில்வே
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



