தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காவல் துறை ஐஜி பதவி உயா்வு: 2 ஆண்டு மத்திய அரசுப் பணி கட்டாயம்

காவல் துறை ஐஜி பதவி உயா்வு: 2 ஆண்டு மத்திய அரசுப் பணி கட்டாயம்

News image
Updated On :31 ஜனவரி 2026, 9:32 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி, ஜன. 31: காவல் துறையில் ஐஜி-யாக (இன்ஸ்பெக்டா் ஜெனரல்) பதவி உயா்வு பெறுவதற்கு காவல் கண்காணிப்பாளா் (எஸ்பி) அல்லது டிஐஜி (துணை இன்ஸ்பெக்டா் ஜெனரல்) பதவியில் இருக்கும்போது குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மத்திய அரசுப் பணி (அயலகப் பணி) அனுபவம் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முதுநிலை காவல் துறை அதிகாரிகள் மத்தியப் படைகளில் அடிப்படை பணி அனுபவத்தைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், 2011-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அதற்குப் பிறகான பிரிவு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இந்தப் பணி அனுபவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக உயா் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரிகளுக்கும் இதுபோன்ற மத்திய பணி மாற்றம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபோதும், மத்திய ஆயுதக் காவல் படைகளில் நியமிக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இத்தகைய நடைமுறை கட்டாயமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.