இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடி

எந்தவொரு பிரச்னைக்கும் ராணுவ மோதல் தீர்வாகாது என பிரதமர் மோடி கூறியது குறித்து....

News image
பிரதம் நரேந்திர மோடி
Updated On :5 மார்ச் 2026, 12:23 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி எந்தவொரு பிரச்னைக்கும் ராணுவ மோதல் தீர்வல்ல எனக் கூறியுள்ளார்.

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்த பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் புவிசார் அரசியல் மாநாடான ரெய்சினா டயலாக் மாநாட்டின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்பை சந்தித்த மோடி, “இந்தியா மற்றும் பின்லாந்து ஆகிய இரண்டு நாடும் சட்டம், பேச்சுவார்த்தையில்தான் நம்பிக்கை கொண்டுள்ளது. எந்தவொரு பிரச்னைக்கும் ராணுவ மோதல் தீர்வாகாது என்பதில் இரண்டு நாடுமே உடன்படுகிறோம்.

மேற்கு ஆசியாவிலோ அல்லது உக்ரைனிலோ எங்கு மோதல்கள் நிகழ்ந்தாலும் அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவர இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும். மேலும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வேரறுப்பது எங்களின் நிலைப்பாடு ஆகும்.” எனத் தெரிவித்தார்.

ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப். 28 முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தெஹ்ரான் உள்ளிட்ட பல நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், ஈரானில் இதுவரை 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், போர் குறித்தும், பயங்கரவாதம் குறித்தும் பிரதமர் மோடி பேசியது கவனம் பெற்றுள்ளது. மேலும், இந்த ரெய்சினா டயலாக் 2026 என்னும் மாநாடு மார்ச் 5 முதல் மார்ச் 7 வரை மொத்தம் 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.