6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ(எம்) 86 இடங்களில் போட்டி!

கேரளத்தில் வரும் ஏப். 9-இல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு

News image
கேரள முதல்வர் பினராயி விஜயன் - Center-Center-Trivandrum
Updated On :15 மார்ச் 2026, 12:38 pm

இணையதளச் செய்திப் பிரிவு

திருவனந்தபுரம் : கேரளத்தில் வரும் ஏப். 9-இல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கேரளத்துடன் சேர்த்து அஸ்ஸாம், புதுச்சேரியில் ஏப். 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப். 23-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் இருகட்டங்களாக ஏப். 23, 29-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையும் அதன் தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளும் மே 4-இல் வெளியாகின்றன.

இந்நிலையில், கேரளத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் சிபிஐ(எம்) 86 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தமுறை தேர்தலில் போட்டியிட்டு இப்போது சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியிலுள்ளவர்களில் 56 பேருக்கு மீண்டும் இம்முறையும் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினராயி விஜயன் தான் ஏற்கெனவே உறுப்பினராகியுள்ள கண்ணூர் மாவட்டம், தர்மடம் தொகுதியில் மீண்டும் அக்கட்சி வேட்பாளராகக் களமிறங்குகிறார். அக்கட்சி மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கே. கே. சைலஜா கண்ணூரின் பேராவூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் தேர்வு முழுக்க முழுக்க ஜனநாயக முறையில் நடத்தப்படும் என்றும் திருவனந்தபுரத்தில் இன்று (மார்ச் 15) செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலர் எம். வி. கோவிந்தன் தெரிவித்தார்.

மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கேரளத்தில், 71 இடங்களைக் கைப்பற்றும் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க தகுதி பெறும். இந்நிலையில், அங்கு ஆளுங்கட்சியாக உள்ள சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி(எல்.டி.எஃப்.), தொடர்ச்சியாக 3-ஆவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்குமா என்பது மே. 4-இல் தெரிய வரும்.

summary

Kerala: On the upcoming Assembly elections CPI(M) will contest in 86 seats.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.