உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம் இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை

News image
இந்தியா - பாகிஸ்தான்- கோப்புப்படம்
Updated On :19 மார்ச் 2026, 2:54 am

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம் இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்காசியாவில் நிலவி வரும் அச்சுறுத்தல் குறித்த அறிக்கையில் அமெரிக்க செனட் சபையில் அந்நாட்டு உளவுத் துறை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல், அச்சுறுத்தல் குறித்தும் 34 பக்க ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க உளவுத் துறை அறிக்கையின்படி, "கடந்த காலங்களில் இந்த இரு (இந்தியா - பாகிஸ்தான்) நாடுகளும் நேருக்குநேர் மோதிக் கொண்டதால், பதற்றம் அதிகரித்து, அணு ஆயுத மோதல் உருவாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலும், இரு நாடுகளுக்கிடையேயான பகைமையை எடுத்துக்காட்டும் உதாரணம்.

இந்தப் போரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டால், இரு நாடுகளுக்கிடையேயான அணு ஆயுத மோதல் பதற்றம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் போரை முடிவுக்குக் கொண்டு வந்தன.

இருப்பினும், பயங்கரவாத அமைப்பினரால் புதிய நெருக்கடிகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

இரு நாடுகளும் வெளிப்படையான போரைத் தீவிரமாக முன்னெடுக்காத நிலையிலும், கடந்த காலத்தின் பகைமைகள், பயங்கரவாதம், வளர்ந்து வரும் ராணுவத் திறன்கள் ஆகியவை நெருக்கடிகளைத் தூண்டுவதாய் உள்ளன.

பாகிஸ்தான் தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிக தொலைவு செல்லக்கூடிய மற்றும் அதிநவீன அமைப்புகளையும் பாகிஸ்தான் உருவாக்கி வருகிறது.

தெற்காசியாவுக்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்கும் அளவுக்கு திறன்கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் போக்கு தொடர்ந்தால், அமெரிக்காவை தாக்கக்கூடிய அளவுக்கு கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அச்சுறுத்தலும் ஏற்படும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.