பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

ப்ரீமியம் பெட்ரோல் விலை திடீர் உயர்வு!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் ப்ரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு

News image

ப்ரீமியம் பெட்ரோல் விலை உயர்வு - பிரதிப் படம்

Updated On :20 மார்ச் 2026, 3:27 pm IST

கச்சா எண்ணெய் விலை உயர்வால் ப்ரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பால், ப்ரீமியம் ரக பெட்ரோலின் விலையை உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ப்ரீமியம் ரக பெட்ரோலான எச்பிசிஎல் எண்ணெய் நிறுவனத்தின் பவர் பெட்ரோல் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எக்ஸ்பி95 பெட்ரோலின் விலையை ரூ. 2 முதல் ரூ. 2.3 வரையில் உயர்த்துவதாக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த வகை பெட்ரோல், பொதுவாக என்ஜின் செயல்திறனை மேம்படுத்தவும், அதிக மைலேஜ் வழங்கவும் வடிவமைக்கப்பட்ட எரிபொருள்களே.

மேலும், தொழில்துறை எரிபொருள்களின் விலையும் லிட்டருக்கு ரூ. 21.92 உயர்த்தி, ரூ. 109.56 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தொழில்துறை எரிபொருளின் விலை ரூ. 87.67 என்ற நிலையில் இருந்தது.

இருப்பினும், சாதாரண பெட்ரோல் விலையில் எந்த உயர்வும் இல்லை.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.

இதன் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது.

Summary

Premium petrol prices hiked by ₹2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.