தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

மனைவி அளித்த தொடர் தொல்லையால் மன உளைச்சல்: கணவன் விஷம் குடித்து தற்கொலை!

விரக்தியில் மன உளைச்சல் அடைந்த கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கு...

News image

தற்கொலை - ANI

Updated On :22 மார்ச் 2026, 9:07 pm IST

மனைவி தொடர் தொல்லை அளித்து வந்த விரக்தியில் மன உளைச்சல் அடைந்த கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கடந்த 3 மாதங்களுக்குப்பின் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் கௌஷாம்பி சுற்றுவட்டாரத்தில் வசித்து வந்த ராம்தேவ் என்பவருக்கும் அவரது மனைவி சவிதா தேவிக்கும் இடையே அடிக்கடி சண்டை எழுந்ததாகக் கூறப்படுகிறது. சவிதா தேவிக்கு அப்பகுதியைச் சேர்ந்த ராமு என்பவருடன் திருமண உறவை மீறி நெருக்கமான பழக்கம் இருந்ததாகவும் அதனை ராம்தேவ் கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, ராமுவும், சவிதா தேவியும் ராம்தேவை தொடர்ந்து துன்புறுத்தியும் அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியும் அவருக்கு கடுமையான மன வேதனையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த விரக்தியில் அவர் கடந்தாண்டு டிசம்பரில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தனது சகோதரர் மரணத்துக்கு அவரது மனைவியே காரணம் என்று அவரது சகோதரர் ரகுநாத் என்பவர் போலீஸில் கடந்த டிசம்பர் 15-இல் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்துள்ள போலீஸார், கடந்த டிசம்பர் முதல் தலைமறைவாகியிருந்த சவிதா தேவியையும் ராமுவையும் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 22) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனநல ஆலோசனை தேவைப்படுபவா்கள் 14416, 14417, 104, 1098, 181 ஆகிய உதவி எண்களைத் தொடா்பு கொள்வது அவசியம்.

Summary

Police have arrested a woman and her partner for allegedly abetting the suicide of her husband, officials said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.