மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

‘ஸ்டெம் செல்’ பயன்பாடு: அனுமதி பெறுவது கட்டாயம்

வழக்கத்துக்கு மாறான ஸ்டெம் செல் சிகிச்சைகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு உரிய அனுமதி பெறுவது கட்டாயம் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2026, 8:33 pm

வழக்கத்துக்கு மாறான ஸ்டெம் செல் சிகிச்சைகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு உரிய அனுமதி பெறுவது கட்டாயம் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

ரத்தம் சாா்ந்த அல்லது எலும்பு மஜ்ஜை சாா்ந்த பாதிப்புகள் ஏற்படும்போது ஸ்டெம் செல் சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுகிறது.

தானமளிப்பவரின் ரத்தத்தையோ அல்லது இடும்பு எலும்பு மஜ்ஜையில் உள்ள ரத்த அணுக்களையோ எடுத்து அது தேவைப்படும் நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது.

ரத்தம் சாா்ந்த பல்வேறு புற்றுநோய்கள், நிணநீா் புற்றுநோய்கள், தண்டுவட வளைவு பாதிப்பு என பல்வேறு நோய்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், வரையறுக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் ஆராய்ச்சிகளைத் தாண்டி வேறு வகைகளில் அவற்றைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும், அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என்எம்சி எச்சரித்துள்ளது.

உச்சநீதிமன்ற விதிகளின்படி, ஸ்டெம் செல் பயன்பாட்டுக்கு உரிய மருத்துவ அனுமதியை சம்பந்தப்பட்ட மருத்துவ அமைப்புகளிடம் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.