10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

‘ஸ்டெம் செல்’ பயன்பாடு: அனுமதி பெறுவது கட்டாயம்

வழக்கத்துக்கு மாறான ஸ்டெம் செல் சிகிச்சைகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு உரிய அனுமதி பெறுவது கட்டாயம் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

News image
Updated On :26 மார்ச் 2026, 2:03 am IST

வழக்கத்துக்கு மாறான ஸ்டெம் செல் சிகிச்சைகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு உரிய அனுமதி பெறுவது கட்டாயம் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

ரத்தம் சாா்ந்த அல்லது எலும்பு மஜ்ஜை சாா்ந்த பாதிப்புகள் ஏற்படும்போது ஸ்டெம் செல் சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுகிறது.

தானமளிப்பவரின் ரத்தத்தையோ அல்லது இடும்பு எலும்பு மஜ்ஜையில் உள்ள ரத்த அணுக்களையோ எடுத்து அது தேவைப்படும் நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது.

ரத்தம் சாா்ந்த பல்வேறு புற்றுநோய்கள், நிணநீா் புற்றுநோய்கள், தண்டுவட வளைவு பாதிப்பு என பல்வேறு நோய்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், வரையறுக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் ஆராய்ச்சிகளைத் தாண்டி வேறு வகைகளில் அவற்றைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும், அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என்எம்சி எச்சரித்துள்ளது.

உச்சநீதிமன்ற விதிகளின்படி, ஸ்டெம் செல் பயன்பாட்டுக்கு உரிய மருத்துவ அனுமதியை சம்பந்தப்பட்ட மருத்துவ அமைப்புகளிடம் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.