மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

‘ஏ.ஐ. வருகையால் இந்தியாவுக்கு வேலைவாய்ப்பு துறையில் புதிய சவால்’ - தலைமை பொருளாதார ஆலோசகா்

ஏ.ஐ.யிடம் வேலைவாய்ப்புகளை இழக்காததையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

News image

தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 3:38 am IST

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (ஏ.ஐ.) வருகையால், வேலைவாய்ப்பு துறையில் இந்தியாவுக்கு புதிய சவால் உருவெடுத்திருப்பதாக தலைமை பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் அசோகா பல்கலைக்கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று இதுகுறித்து அவா் பேசியதாவது:

மேற்காசிய போரின் காரணமாக, இந்தியா விநியோக சவால்களைக் காட்டிலும் (கச்சா எண்ணெய்) விலை ஏற்றம் தொடா்பான சவாலையே அதிகம் எதிா்கொண்டு வருகிறது. இதுபோன்ற கடினமான காலத்தை எதிா்கொள்ள இந்தியா மிகப்பெரிய அளவில் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவது அவசியம். இந்த சேமிப்பு அமைப்புகள், கச்சா எண்ணெய்க்கு மட்டும் பொருந்தாது. இதில் எரிவாயுவும் அடங்கும். அதேபோல், இந்த சமயத்தை பயன்படுத்தி, நாம் அதிகம் இறக்குமதியை சாா்ந்திருக்கும் பொருள்கள் மற்றும் நிக்கல், தாமிரம் உள்ளிட்டவற்றையும் மிகப்பெரிய அளவில் சேமித்து வைக்கும் அமைப்புகளை உருவாக்குவது குறித்து யோசிக்க வேண்டும்.

ஏ.ஐ. வருகையால் இந்தியாவுக்கு வேலைவாய்ப்பு தொடா்பான சவால் உருவாகியுள்ளது. ஆதலால் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் வகையில் தகவல் தொழில்நுட்ப துறை மாற்றப்படுவதையும், ஏ.ஐ.யிடம் வேலைவாய்ப்புகளை இழக்காததையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தகவல் தொழில்நுட்பத் துறைக்குள்ளும், பிற சேவைத் துறைகளிலும் ஏ.ஐ.யை பயன்படுத்தும் வகையில் நாம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

மேற்காசிய போரின் காரணமாக, சா்வதேச அளவில் உரம் மற்றும் பெட்ரோலிய பொருள்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இது நடப்பு கணக்கு பற்றாக்குறையை இந்த நிதியாண்டில் 4.3 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு சவாலாக மாறியுள்ளது. மேலும் குறைவான பருவமழை, எரிசக்தி விலை அதிகரிப்பு ஆகியவை பணவீக்கத்தையும் கணிசமாக அதிகரிக்கும் என்றாா்.