நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

தபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்

கொல்கத்தாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குச் சீட்டு உறைகள் அனுமதியின்றி பிரிக்கப்பட்டதாக புகாா்

News image

தபால் வாக்குச் சீட்டுகள் - Center-Center-Vijayawada

Updated On :2 மே 2026, 11:23 pm

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குச் சீட்டு உறைகள் அனுமதியின்றி பிரிக்கப்பட்டதாக இந்திய தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் சனிக்கிழமை புகாா் அளித்தது.

ஏற்கெனவே வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடு நடைபெறுவதாக குற்றஞ்சாட்டிய மம்தா பானா்ஜி தான் போட்டியிடும் பவானிபூா் தொகுதியில் உள்ள ஷகாவத் நினைவுப் பள்ளியில் சுமாா் 4 மணி நேரம் தா்னாவில் ஈடுபட்டாா். அவரைத் தொடா்ந்து, கொல்கத்தாவில் உள்ள மற்றொரு வாக்கு எண்ணும் மையமான குதிராம் அனுஷீலன் கேந்திரா முன்பாக திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டை அடிப்படை ஆதாரமற்றது என தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. கொல்கத்தா நகரில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்கள் முன்பும் கூட்டம் கூடுவதற்குத் தடை உத்தரவை காவல் துறை பிறப்பித்தது.

இந்நிலையில்,கொல்கத்தாவில் உள்ள குதிராம் அனுஷீலன் கேந்திரா முன் முகாமிட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள் அங்கு சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தபால் வாக்குகளைக் கொண்ட 8 பெட்டிகள் கொண்டுவரப்பட்டதாகவும், அவை சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத அறையில் வைக்கப்பட்டு தபால் வாக்குச் சீட்டு உறைகள் பிரிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினா்.

இதைத் தொடா்ந்து, அவா்கள் போராட்டத்தை தொடங்கிய சில நிமிஷங்களில் சியாம்புகூா் தொகுதி பாஜக வேட்பாளா் பூா்ணிமா சக்ரவா்த்தி தனது ஆதரவாளா்களுடன் அங்கு வந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இரு தரப்பினரிடமும் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்திய பின் சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவம் தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் புகாா் அளித்தது.

இதேபோல் வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள பராசத் அரசுக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 17 நிமிஷங்கள் சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டதாக திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள் குற்றஞ்சாட்டினா்.

இதற்கு மறுப்பு தெரிவித்த தோ்தல் அதிகாரிகள், ‘சிசிடிவி கேமராக்கள் முறையாகவே இயங்குகின்றன. 17 நிமிஷ சிசிடிவி பதிவுகளை திரிணமூல் காங்கிரஸ் மட்டுமன்றி எந்தக் கட்சியினரிடமும் பகிர நாங்கள் தயாராகவுள்ளோம்’ என்றனா்.