/
இந்தியா-இலங்கை இடையிலான பாக் நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்த ஏழு வயதுச் சிறுவன் இஷாங்க் சிங்.
ஜாா்க்கண்டைச் சோ்ந்த இஷாங்க், அண்மையில் இலங்கையின் தலைமன்னாரில் நீந்தத் தொடங்கி தமிழகத்தின் தனுஷ்கோடியை வந்தடைந்தாா். சுமாா் 29 கி.மீ. தொலைவுள்ள இந்த பாக் நீரிணைப் பகுதியை 9 மணி நேரம் 50 நிமிஷங்களில் இஷாங்க் நீந்திக் கடந்தாா். பாக் நீரிணையை மிகக் குறைவான வயதில் மிக வேகமாக கடந்து இரட்டை உலக சாதனையைப் படைத்துள்ளாா் இச்சிறுவன்.









