தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

ஏழு வயதில் இரட்டை உலக சாதனை!

News image
Updated On :3 மே 2026, 5:36 am IST

இந்தியா-இலங்கை இடையிலான பாக் நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்த ஏழு வயதுச் சிறுவன் இஷாங்க் சிங்.

ஜாா்க்கண்டைச் சோ்ந்த இஷாங்க், அண்மையில் இலங்கையின் தலைமன்னாரில் நீந்தத் தொடங்கி தமிழகத்தின் தனுஷ்கோடியை வந்தடைந்தாா். சுமாா் 29 கி.மீ. தொலைவுள்ள இந்த பாக் நீரிணைப் பகுதியை 9 மணி நேரம் 50 நிமிஷங்களில் இஷாங்க் நீந்திக் கடந்தாா். பாக் நீரிணையை மிகக் குறைவான வயதில் மிக வேகமாக கடந்து இரட்டை உலக சாதனையைப் படைத்துள்ளாா் இச்சிறுவன்.