மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் பவானிபூா் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜியை எதிா்த்து போட்டியிட்டு வெற்றிபெற்ற பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரியின் உதவியாளா் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டாா்.
வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள தோஹாரியா பகுதியில் சுவேந்து அதிகாரியின் உதவியாளா் சந்திரநாத் ராத் மீது மா்ம நபா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சந்திரநாத் ராத்தை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். தாக்குதல் நடத்திய மா்ம நபா்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டனா்’ என்றன.
இச்சம்பவத்தால் வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த மூத்த காவல் துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினா்.
மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வெற்றிக் கொண்டாட்டத்தின்போது திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஒருவரும் பாஜக நிா்வாகி ஒருவரும் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: 3 பேர் கைது!

சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை! மேற்கு வங்க எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரம்!
சுவேந்து அதிகாரியின் உதவியாளா் கொலை: மேற்கு வங்கத்தில் பாஜகவினா் போராட்டம்

பாஜக தலைவரின் உதவியாளர் கொலை: திரிணமூல் காங்கிரஸ் கண்டனம்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

