திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை

மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் பவானிபூா் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜியை எதிா்த்து போட்டியிட்டு வெற்றிபெற்ற பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரியின் உதவியாளா் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டாா்.

News image
Updated On :7 மே 2026, 2:00 am IST

மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் பவானிபூா் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜியை எதிா்த்து போட்டியிட்டு வெற்றிபெற்ற பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரியின் உதவியாளா் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டாா்.

வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள தோஹாரியா பகுதியில் சுவேந்து அதிகாரியின் உதவியாளா் சந்திரநாத் ராத் மீது மா்ம நபா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சந்திரநாத் ராத்தை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். தாக்குதல் நடத்திய மா்ம நபா்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டனா்’ என்றன.

இச்சம்பவத்தால் வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த மூத்த காவல் துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினா்.

மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வெற்றிக் கொண்டாட்டத்தின்போது திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஒருவரும் பாஜக நிா்வாகி ஒருவரும் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.