நாட்டில் கோதுமை விளைச்சல் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு கோதுமை விளைச்சல் 117.94 மில்லியன் டன்னாக இருந்தது. அப்போது பருவம் தப்பிய மழை, ஆழங்கட்டி மழையால் சில இடங்களில் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்தியாவில் மட்டுமல்லாது சா்வதேச அளவில் கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களின் தேவையும் அதிகரித்தது. எனவே, நடப்பு கோதுமை சாகுபடி பருவத்தில் (2025 ஜூலை- 2026 ஜூன் வரை) விளைச்சல் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியும் எழுந்தது.
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் சிவராஜ் சிங் இது தொடா்பாக கூறுகையில், ‘கோதுமை விளைச்சல் கடந்த ஆண்டைவிட சிறப்பாகவே இருக்கும் என்று அரசு நம்புகிறது. ஏனெனில், இந்த முறை இதுவரை விளைச்சல் சிறப்பாகவே உள்ளது. அரசும் சாதனை அளவில் கோதுமை கொள்முதல் செய்யும் நோக்கத்தில் உள்ளது. 120.21 மில்லியன் டன் அளவுக்கு உற்பத்தி இருக்கும் என்று வேளாண்மை அமைச்சகம் ஏற்கெனவே மதிப்பிட்டுள்ளது’ என்றாா்.
அதே நேரத்தில், கடந்த மாதம் இந்திய கோதுமை ஆலை கூட்டமைப்பினா் வெளியிட்ட அறிவிப்பில், ‘அண்மையில் மோசமான வானிலையால் ஏற்பட்ட பாதிப்பால் கோதுமை விளைச்சல் கடந்த ஆண்டைவிட குறைவாகவே இருக்கும்’ என்று கூறப்பட்டிருந்தது.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (12.05.2026) - தனுசு

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா உறுதி: பிரதமா் மோடி
இன்றைய ராசி பலன் (04.05.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (03.05.2026) - மிதுனம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
