தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

லக்னௌ விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு!

ரேபரேலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் பங்கேற்பது பற்றி..

News image

ராகுல் காந்தி - x.com

Updated On :19 மே 2026, 12:59 pm IST

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி ரேபரேலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று உரையாற்றவுள்ளார்.

லக்னௌ விமான நிலையத்திற்கு வந்த ராகுல் காந்தியை, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ரா மற்றும் பிற தலைவர்கள் அவரை வரவேற்றனர். அவரை வரவேற்க ஏராளமான கட்சித் தொண்டர்களும் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். அங்கிருந்து, ராகுல் காந்தி ரேபரேலிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ரேபரேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பங்கஜ் திவாரி கூறுகையில்,

இரண்டு நாள் பயணமாக தனது சொந்தத் தொகுதிக்கு வந்துள்ள ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தனது பயணத்தின் முதல் நாளில், பச்ராவனில் உள்ள தாகுரைன் கேடா பகுதியில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை ராகுல் காந்தி திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, கீரான் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். இதையடுத்து, லால் கஞ்ச் பகுதியில் நடைபெறும் மகிளா சம்வாத் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார்.

மே 20ல் ஜனதா தர்ஷன் நிகழ்ச்சியின்போது, ​​ராகுல் காந்தி பொதுமக்களைச் சந்தித்துப் பேச உள்ளார். இதனைத் தொடர்ந்து, 'வீர பாசி' என்பவரின் சிலையைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியிலும், லோத்வாரி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்பார். அதன் பிறகு அவர் அமேதிக்குப் புறப்பட்டுச் செல்வார்.

அமேதியில் உள்ள மாவட்டக் கட்சித் தலைமையகத்தில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்துவார்.

இந்தச் சந்திப்பு 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூக ரீதியான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாகவும், கட்சி அமைப்பை மறுஆய்வு செய்யும் நடவடிக்கையாகவும் அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Summary

Leader of the Opposition in the Lok Sabha and Congress MP from Raebareli Rahul Gandhi will address a public meeting in Raebareli on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.