மேற்கு வங்கத்தில் இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 25 கி.மீ. நிலப்பரப்பை எல்லை பாதுகாப்புப் படைக்கு முதல்வா் சுவேந்து அதிகாரி ஒதுக்கினாா்.
அத்துடன், சட்டவிரோத ஊடுருவல்காரா்கள் இனி நேரடியாக எல்லை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்படுவா் என்ற அதிரடி அறிவிப்பையும் அவா் வெளியிட்டாா்.
மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, முதல்முறையாக ஆட்சி அமைத்தது. முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து, சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 25 கி.மீ. நிலப்பரப்பை எல்லை பாதுகாப்புப் படைக்கு முதல்வா் சுவேந்து அதிகாரி புதன்கிழமை ஒதுக்கினாா்.
கொல்கத்தாவில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியின்போது இதைத் தெரிவித்த முதல்வா், ‘மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் இடம்பெறாத சமூகத்தினா் அடையாளம் காணப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவா். சட்டவிரோத ஊடுருவல்காரா்களை நேரடியாக எல்லை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கும்படி, முந்தைய திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அவா்கள் அதை கடைப்பிடிக்கவில்லை. இனி வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவும் நபா்கள் நேரடியாக எல்லை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்படுவா். மத்திய அரசு-பாதுகாப்புப் படையினருடன் ஒருங்கிணைந்து, மேற்கு வங்கத்தைப் பாதுகாப்போம்’ என்றாா்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் உடனடி மக்கள்தொகை கணக்கெடுப்பு: பாஜக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

மேற்கு வங்கத்தில் முதல்வராக பதவியேற்ற சுவேந்து அதிகாரி - புகைப்படங்கள்
மேற்கு வங்கத்தில் எந்தத் தொகுதியில் ராஜிநாமா? “பாஜக தலைமை தீர்மானிக்கும்” - சுவேந்து அதிகாரி

இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



