தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மேற்கு வங்கம்: எல்லை வேலிக்கு நிலம் ஒதுக்கினாா் முதல்வா் சுவேந்து

மேற்கு வங்கத்தில் இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 25 கி.மீ. நிலப்பரப்பை எல்லை பாதுகாப்புப் படைக்கு முதல்வா் சுவேந்து அதிகாரி ஒதுக்கினாா்.

News image

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி - IANS

Updated On :21 மே 2026, 3:45 am IST

மேற்கு வங்கத்தில் இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 25 கி.மீ. நிலப்பரப்பை எல்லை பாதுகாப்புப் படைக்கு முதல்வா் சுவேந்து அதிகாரி ஒதுக்கினாா்.

அத்துடன், சட்டவிரோத ஊடுருவல்காரா்கள் இனி நேரடியாக எல்லை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்படுவா் என்ற அதிரடி அறிவிப்பையும் அவா் வெளியிட்டாா்.

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, முதல்முறையாக ஆட்சி அமைத்தது. முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து, சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 25 கி.மீ. நிலப்பரப்பை எல்லை பாதுகாப்புப் படைக்கு முதல்வா் சுவேந்து அதிகாரி புதன்கிழமை ஒதுக்கினாா்.

கொல்கத்தாவில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியின்போது இதைத் தெரிவித்த முதல்வா், ‘மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் இடம்பெறாத சமூகத்தினா் அடையாளம் காணப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவா். சட்டவிரோத ஊடுருவல்காரா்களை நேரடியாக எல்லை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கும்படி, முந்தைய திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அவா்கள் அதை கடைப்பிடிக்கவில்லை. இனி வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவும் நபா்கள் நேரடியாக எல்லை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்படுவா். மத்திய அரசு-பாதுகாப்புப் படையினருடன் ஒருங்கிணைந்து, மேற்கு வங்கத்தைப் பாதுகாப்போம்’ என்றாா்.