பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

குழந்தைப் பாடல்கள்

குழந்தைப் பாடல்கள் குறித்து...

Published On :

மழலைவீணை

மஞ்சக் குருவி பிஞ்சு மரத்தில்

ஊஞ்சல் ஆடுது- பாப்பா

ஊஞ்சல் ஆடுது!

வஞ்சமில்லா நெஞ்சத்துக்கு

வட்டம் போடுது- பாப்பா

வட்டம் போடுது!

சிறகு முழுதும் கோதிக் கோதி

இறகை உலர்த்தது- பாப்பா

இறகை உலர்த்துது!

பறப்பதற்கு அங்குமிங்கும்

பார்த்து எழும்புது- பாப்பா

பார்த்து எழும்புது!

குஞ்சுக் குருவி வாயைப் பிளந்து

உணவு கேக்குது!- பாப்பா

உணவு கேக்குது!

நெஞ்சுக்குள்ளே பாசத் தோடு

அம்மா ஊட்டுது- பாப்பா

அம்மா ஊட்டுது!

கூடு விட்டுக் குஞ்சு வெளியில்

பறக்கப் பார்க்குது- பாப்பா

பறக்கப் பார்க்குது!

ஆடிக் கொண்டே அம்மாவுக்கு

தடவிக் கொடுக்குது- பாப்பா

தடவிக் கொடுக்குது!

குருவி போல அம்மா மேலே

பாசம் கொள்ளனும்- பாப்பா

பாசம் கொள்ளனும்!

-முனைவர் பொன்னியின் செல்வன்

குழந்தை உலகம்...

குழந்தைகளே பள்ளிக்கு வாருங்கள்

குதூகலமாய் சிரித்து விளையாடுங்கள்

நாளைய உலகம் நீங்கள்தான்

நல்லோர் ஆகவே வளருங்கள்!

கல்வி உங்கள் கண்ணாகும்

கற்றால் வாழ்க்கை உயர்வாகும்

பெற்றோர் சொல்லே சொத்தாகும்

பெரியோர் வழியே வித்தாகும்!

அறிவின் வழியில் செல்லுங்கள்

அறத்தின் வழியில் நில்லுங்கள்

அன்பின் மொழியில் பேசுங்கள்

அறிந்ததை ஆய்ந்து தெளியுங்கள்!

நட்பால் வாழ்க்கை எளிதாகும்

நல்லன செய்தலே இனிதாகும்

குழந்தை உலகம் புனிதமாகும்

குவலயம் எங்கும் மகிழ்வாகும்!

-வசீகரன், தேனாம்பேட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.