ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

நீதிக் கதைகள்! கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

News image

நீதிக் கதைகள்! கடவுள் இருக்கிறாரா? இல்லையா? - படம்: கோப்பிலிருந்து...

Updated On :27 ஏப்ரல் 2026, 4:37 pm IST

அன்று ஞாயிற்றுக் கிழமை. சுந்தர், தன் நண்பரான டாக்டர் கந்தசாமியைப் பார்க்கச் சென்றார். எப்போதும் அதி புத்திசாலித்தனமாகப் பேசி சுந்தரை வறுத்தெடுக்கும் டாக்டர் கந்தசாமி அன்று புதிய தலைப்பைத் தொடங்கினார்.

'கடவுள் இருக்கிறாரா? இல்லையா?' என்பதுதான் அது!

திடீர் நாத்திகவாதி போல ஆரவாரமாய்ப் பேசினார் கந்தசாமி. 'எதுக்கு உலகத்துல இவ்வளவு வறுமை, பஞ்சம், பசி, பட்டினி, சண்டை, பூசல், ஏற்றத் தாழ்வு எல்லாம்?...கடவுள் இருந்தால் இதெல்லாம் நடக்குமா? இருந்தாலும் அவருக்குக் கருணை இல்லைன்னுதானே அர்த்தம்?'' என்று அடுக்கடுக்காக வாதங்களை அடுக்கி கடவுள் இல்லை என்று பேசினார்.

சுந்தர் கடவுள் நம்பிக்கை உடையவர்.

எனினும் வீண் விவாதத்தைத் தவிர்க்கும் பொருட்டு பேசாமல் இருந்தார். ஆனால் கந்தசாமி விடுவதாக இல்லை!....'பாருங்களேன்!....வெறுப்பு, பயம், பொறாமை, அதிக ஆசை எல்லாம் உலகில் மண்டியிருக்கிறது...

கடவுள்னு ஒருத்தர் இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா? என்ன?...நான் சொல்றது சரிதானே?''

சுந்தரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! 'உலகில் டாக்டர்னு யாருமே இல்லை!'' என்றார் சுந்தர்.

'ஏன் நானே டாக்டர்தானே!.....'' என்று கோபமாகவே கேட்டார் கந்தசாமி.

'அப்புறம் இந்த உலகில் ஏன் இவ்வளவு நோய்கள்.....நோயாளிகள்...,டாக்டர்னு ஒருத்தர் இருந்தா இப்படி நடக்குமா?'' என்று கேட்டார் சுந்தர்.

'நோயாளிகள் எங்களைப் போன்ற டாக்டர்களிடம் நம்பிக்கையுடன் வந்தால்தானே நோயைச் சரி செய்ய முடியும்?''

'அதைப் போலத்தான்! கடவுளிடம் நம்பிக்கையுடன் சென்றால்தானே அவர் கருணை புரிவார்?'' என்றார் சுந்தர். வேறு வழியில்லாமல் வாயடைத்துப் போனார் கந்தசாமி.

Summary

A moral story that children should know

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.