நாமக்கு கிடைத்திருக்கும் நூல்களில் மூத்தத் தொல்காப்பியம் என்று கொண்டாடுகிறோம். தொல்காப்பியம் இரண்டாயிரம் ஆண்டுப் பழைமையானது என்று சொல்லப்படுகிறது. இந்த நூல் வெறும் இலக்கண நூல் அல்ல. வாழ்வுக்கு இலக்கணம் வகுத்த நூலும் இது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே இலக்கியத்துக்கு மட்டும்மல்லாமல் மனித வாழ்விற்கே இலக்கணம் வகுக்திருக்கும் அந்த நூல் எவ்வளவு பழமையானதாக பண்பட்டதாக இருந்திருக்க வேண்டும். அதவாது தொல்காப்பியம் எழுதுவதற்கும் முன்னலேயே தமிழ் மக்கள் சிறந்த ஒரு பண்பாட்டு வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டும் என்பதும் அவர்கள் காலத்து இலக்கியம் மிகவும் செழுமையானதாகவே இருந்திருக்க வேண்டும் என்பதும் தெளிவு.
சங்க இலக்கியங்களுக்கு முன்னாலேயே மிகச் சிறந்த இலக்கிய மரபு தமிழுக்கு அமைந்திருக்க வேண்டும். அந்த மரபு இன்றளவும் புதுமைகளும் அழகுகளும் கொண்டு வளர்ந்து கொண்டிருக்கிறது.
சங்கத்தமிழ் இலக்கியங்கள் திட்டவட்டமான செக்குலார் இலக்கியங்கள். அதவது அந்த இலக்கியங்களில் சாதிச் சாய்வுகளோ மதச் சாய்வுகளோ வர்ணச் சாய்வுகளோ இருந்ததில்லை. இப்படிப்பட்ட மதச்சார்பற்ற இலக்கியம் உலகில் வேறெங்கும் இருந்தாகத் தெரியவில்லை. இது தமிழுக்கு கிடைத்த தனி சிறப்பு பெருமை.
சங்க இலக்கிய காலத்துக்கு பிறகு தான் தமிழில்; பக்தி இலக்கியம் தோன்றி வளர்ந்தது. பக்தி இலக்கியம் வளரும்போதே பிரபல பிறமொழி கலப்புகளும் பிற பண்பாட்டுக் கலப்புகளும் சேர்ந்தன. சங்க இலக்கியத்தில் காணக்கிடைக்காத பால் பேத ஏற்றத்தாழ்வுகள் பத்திஇலக்கிய காலத்தில் தான் ஏற்ப்பட்டன.
தொடர்ந்து தமிழ் காவிய காலம் என்னும் ஒரு பிரம்மாண்டமான காலமாக விரிந்தது. வில்லிப்புத்தூரா மகாபாரதத்தைத் தழுவி ஒரு பாரதம் எழுதினார். ; கவிசக்கரவர்த்தி கம்பர் எல்லை இல்லா அழகுடன் கம்பராமயணத்தை இயற்றினார். அதன் சொல்லழகு கருத்தழகு கவியழகு காவிய அழகு எல்லாமே ஒப்பற்றவை.
விருத்தத்தில் கம்பனைப்போல் விளையாடிய வேறு ஒரு கவிஞரை பார்க்க முடியாது. கம்பனின் காலம் பிரபுத்துவ இலக்கியம் தன் உச்சத்தை தொட்டக்காலம் என்பார் ஜீவா. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
பேரிலக்கியக்காலங்கள் பேரரசர்கள் காலத்தில் தான் செழித்தன. சேர மன்னர்களின் காலத்தில் தோன்றியது தான் சிலப்பதிகாரம். இளங்கோவடிகளால் அது திருவஞ்சிக்களத்தில் வைத்து எழுதப்பட்டது. சோழப் பேரரசின் காலத்தில் வில்லிப்புத்தூரார் பாரதமும் கம்பராமணயம் தோன்றித் தமிழை மேம்படுத்தின.
தொடர்ந்து வட வர்களின் ஆதிக்கத்தால் சேர சோழ பாண்டிய அரசுகள் சிதைந்து சின்னாபின்னம் ஆயின. பேராரசுகள் வடவர்களுக்குக் கைப்பாவைகளாக செயல்ப்பட்ட சிற்றரசுகளாகச் சிறுத்தன. இந்த சிற்றரசுகள் சுய ஆதிக்கமற்றவை சுய அதிகாரம்மற்றவை இந்த காலத்தில் அரசியல் எழுச்சி மிக்க நூல்கள் வர வாய்ப்பேஇல்லை.
காமச்சுவை மிகுந்த சிற்றிலக்கியங்களே இக்காலத்தில் அதிகம் தோன்றின. இவை உலா கலம்பகம் முதலிய சிற்றிலக்கியங்களின் வடிவங்களில் வளர்ந்தன. உலா என்பது மன்னன் உலா வரும்போது பல பருவத்துப் பெண்களும் அவனைப் பார்த்துக் காமுறுவது போல் பாடப்படுவதாகும்.
இம்மாதிரியான உலாக்களும் கலம்பகங்களும் தொடக்கலாத்தில் கவர்ச்சிகரம்மாக இருந்தலும் காலப்போக்கில் கவர்ச்சி இழந்தன காமம் மிகுந்தன. இக்காலத்தில் ஆங்கில ஆட்சி இந்தியாவில் நிலைக்கொண்டது.
ஆங்கில ஆட்சியானது ஆங்கிலக் கல்வியையும் ஆங்கில இலக்கியத்தையும் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தியது. ஆங்கிலம் கற்ற புதிய தலைமுறைப் படிப்பாளிகள் உலா கலம்பமம் முதலியவற்றை வெறுத்தார்கள். அவர்கள் ஆங்கில நாவல்கள் போல தமிழிலும் நாவல்கள் எழுத விரும்பினார். உரைநடை பிறந்து வளர்த் தொடங்கியது அப்படி உரைநடையிர் தோன்றிய முதல் நாவல்தான் பிரதப முதலியார் சரித்திரம்.
பிரதப முதலியார் சரித்திரம் இது ரொமாண்டிக் வகையைச் சார்ந்தது. ரொமண்டிக் வகை என்பது புனைவியல் வகை. அது வரலாற்றின் மீது கட்டப்படுவது அல்ல. படைப்பாளி தன் விருப்பத்துக்குப் புனைவது. கற்பனையான நாடு கற்பனையான மக்கள் கற்பனையான அரசு கற்பனையான சமூகம் ரொமண்டிக் படைப்பில் எல்லாமே கற்பனை. இந்தக் கற்பனைத் தன்மையோடு படைக்கப்பட்ட முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்.
அடுத்த உரைநடை நாவல் யதார்த் நாவல். மாதவ அய்யா எழுதிய பத்மாவதி சரித்திரம் அது. மூன்றாவது வகை நாவல் நவீனத்துவ நாவல். வீழ்ச்சி அடைந்த உயர் சமூகங்களின் சோகங்களைப் பேசுவது அது. ராஜம் ஐயர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம்; இவ்வகையைத் தோற்றுவித்தது.
தொடர்ந்து தமிழ் நாவல் இலக்கியம் பலவகையாகக்; கிளைவீசிப் படர்ந்தது. உழைப்பாளிகளின் வாழ்க்கையைச் சொல்லும் பஞ்சும் பசியும் நாவலை ரகுநாதன் எழுதினார். இந்த வகையை யதார்த்தவகை நாவல்கள் என்று சொல்லுவார்கள்.
யதார்த்தவகை நாவல் யதார்த்த மொழியை கொண்டது. அதாவது மக்கள் பேசும் மொழியை கொண்டது. யதார்த்த வாழ்வை சித்தரிப்;பது அது. யதார்த்த மொழியை சித்தரிப்பதில் வலுவான பாதை அமைத்தவர் கி. ராஜ நாராயணன். அவர் காலத்துக்கு பின் வரலாற்று நாவல்கள் மட்டுமே பொது தமிழை எழுதப்படுகின்றன. மற்றவை எல்லாம் யதார்த்த மொழியில் எழுதப்படுகின்றன. மொழி யதார்த்தமாகும்போது அது சொல்லும் வாழ்வும் யதார்த்தமாகி விடுகிறது. இன்றய சம கால நாவல்கள் எல்லாமே யதார்த்த மொழியில் எழுதப்படுபவையே.
அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக சமூகத்தில் நரகங்களில் குவியும் அழுக்குகள் பழைய கால அழுக்குகளைப் போல் உரமாகச் செரிமானமாவது இல்லை. இந்த அழுக்குகளால் காற்றும் மண்ணும் நீரும் நாசம் அடைகின்றன. திருப்பூர் நகரச் சயப் பட்டறைகளில் சேகரம் ஆகும் அழுக்குகள் நிலத்தடி நீரைக் கெடுக்கிறது. நீர் பாயும் நேய்யல் ஆற்றை அதன் குளங்களை கிணறுகளை எல்லாம் கெடுத்துவிடுகின்றது. இந்தத் துயரத்தை ஆபத்தை சுப்பிர பாரதி மணியனின் நாவல்கள் சித்திரிக்கின்றன.
ஒவ்வெரு வட்டாரத்துப் படைப்பாளியும் தன் வட்டாரத்து மொழியைத் தமிழுக்கு தருகிறார். அதனால் தமிழ்மொழி விசாலம் அடைகிறது. புதிய புதிய சொற்கள் மொழியில் சேகரம்மாகின்றன. புதிய புதிய வார்த்தைகள் சேகரம்மாகின்றன. புதுப் புது வட்டாரப் பேச்சுக்கள் சேகரம்மாகின்றன. இவை படிப்படியாகத் தமிழை வளப்படுத்துகின்றன. இது காலப்போக்கில் தமிழ்மொழியை விசாலப்படுத்துகிறது. இது ஒரு வளர்ச்சிப்போக்கு.
ஆக தமிழ் மொழியின் வடிவம் உரைநடைக்கு மாறியிருக்கிறது. மொழி எதார்த்த மொழியாக மாறியிருக்கிறது. வட்டாரத் தன்மை தமிழை விசாலப்படுத்தி வருகிறது. இது தொடர்ந்து நீண்ட காலம் நடக்க இருக்கிற முயற்சி. இதனால் தமிழ் மொழி தமிழ் நாட்டின் வட்டாரத் தன்மையிலிருந்து படிப்படியாகத் தேசியத் தன்மைக்கு விசாலமடைகிறது.