செவ்வியல் இலக்கியங்கள்: குழந்தை இலக்கிய விழுமியங்கள்

அறிவென்பது ஆற்றல் மிகுந்த ஆயுதம், பண்பாடு அதைப் பாதுகாக்கும் உறை.பண்பாடு சேராத அறிவானது வாழ்வையும், சமுதாயத்தையும் அழிக்கும்.
செவ்வியல் இலக்கியங்கள்: குழந்தை இலக்கிய விழுமியங்கள்

மனித இன வரலாற்றில் அன்னை தன் குழந்தையைத் தாலாட்டி மகிழ்ந்த
தொடக்கக்காலத்தைக் குழந்தை இலக்கியத்தின் கரு தோற்றம் பெற்ற காலம் எனலாம். குழந்தைகள் படிப்பதற்காகவும் பாடுவதற்காகவும் குழந்தை மொழியிலேயே இலக்கியம் உருவாகியது 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான். குழந்தை இலக்கியத்தின் முதல் வடிவம் நாடோடி இலக்கியம். நாடோடிப் பாடல்களும் கதைகளும் இந்த உண்மையை உணர்த்துகின்றன என்று குழந்தை இலக்கியத்தின் நீண்ட கால வரலாற்றை அறிஞர்கள் எடுத்துக்காட்டுவர்.சங்க இலக்கியம் போலத் தமிழில் குழந்தை இலக்கியமும் தொன்மையானது.

 குழந்தை இலக்கியத்தில் பழமையானது நாடோடி இலக்கியமே. பண்டைக்
காலத்துத் தமிழர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் இலக்கிய நூல்களான சங்க இலக்கியத்தில் குழந்தைப் பற்றிய செய்திகள் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளன.பல்வேறு பாடல்களில் குழந்தை மொழி பெற்றோர்க்கு இனிமைபயப்பதும் பாலூட்டுவதும் நிலவொளியில் குழந்தைகள் பந்தும் கழங்கும் ஆடுவதுமாகிய செய்திகள் குறிப்பிடப்படுகின்றன.

 குழந்தையை ஒரு செல்வமாகக் கருதுவது தமிழகத்தின் பண்பு. தம் மக்களே தமது பொருள் என்ற உயரிய எண்ணம் இந்த மண்ணில் ஆழப்பதிந்துள்ளது. அத்தகைய குழந்தைகளுக்கு அறிவையும் துணிவையும் அழகியப் பண்புகளையும் இளமையில் எளிதாகக் கற்றுத் தருவது குழந்தைப் பாடலாகும். குழந்தைச் செல்வம் வாழ்க்கையின் பேறாகக் கருதப்படுகிறது.

“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறு நன்கலம் நன்மக்கட் பேறு” --என்பது வள்ளுவரின் வாய்மொழி.

 மனித குல வளர்ச்சிக்கும் சமூக பெருக்கத்திற்கும் குழந்தையே அடிப்படையானது. வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்றிருந்தாலும் குழந்தைப் பேறு இல்லையென்றால் வாழ்ந்து பயனிலை. ஆகவே வாழ்க்கையின் பயன்களில் மக்கட்பேறும் ஒன்று என்பது புலனாகிறது.  சங்க காலத்து மக்கள் இம்மை வாழ்வின் மகிழ்ச்சிக்கும் மறுமை வாழ்வின் உயர்வுக்கும் குழந்தைச் செல்வமே இன்றியமையாதது என நம்பினார்கள் என்பதை,

“இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மருவின்றி எய்துப
செருநரும் விழையும் செய்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோரெனப்
பல்லோர் கூறிய பழமொழி என்ற அகநானூற்றுப் பாடல் வழியாக அறியலாம்.

 குழந்தைப் பேறு கிடைக்கவில்லை என்றால் தவம் இருந்து குழந்தைச்
செல்வத்தைப் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் சங்ககால மக்கள் வாழ்ந்தனர் என்பதைக்,

“குன்றக் குறவன் கடவுட் பேணி
இரந்தனன் பெற்ற வெள்வளைக் குறுமகள்.’’

என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் அடிகள் உணர்த்துகின்றன. குழந்தைப் பேசத்
தொடங்குகிறது. பொருள் புரியாத அம்மொழி தந்தைக்குத் தேன் போல் இனிமை பயப்பதாக உள்ளது.

“அத்தத்தா என்னும் நின்
தேன் மொழிகேட்டல் இனிது.”

குழந்தையின் “அத்தத்தா” என்னும் மழலை மொழி கேட்டு அக்குழந்தையின்
தந்தை மகிழும் நிலையை கலித்தொகைப் பாடலில் காணலாம். மேலும் குழந்தையின் மழலை மொழியினைத் “தேமொழி” எனப் பகர்வது இன்பத்திற்குரியது.

குழந்தைகள் உணவைக் கையால் தொட்டும், தம்மேல் பூசிக்கொண்டும், க Pழே
இரைத்தும், மற்றவர்கள் மேல்பூசியும் விளையாடும் செயல்களால் பிறரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியும், தம்மையும் மகிழ்விப்பர். இதனை,

“குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தம்
மயக்குறு மக்கள்...”
“அமிழ்தினும் ஆற்றஇனிதே தம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ் விய கூழ்”

போன்ற வரிகளால் அறிய முடிகிறது. சிறுகுழந்தைகட்கும் கழுத்தில்
புலிப்பல்லைக் கோத்த சங்கிலியை அணிவித்தனர். அச்சமின்மை மற்றும் குழந்தைப் பருவத்திலேயே மறக்குணம் வளரவேண்டும் என்பதற்காக அணிவிக்கப்பட்ட இச்செய்தியை  அகப்புறப் பாடல்கள் மூலம் அறியலாம். சங்க இலக்கியம் குழந்தையின் தளர் நடையினை அழகாக வெளிப்படுத்துகின்றன. “தளர் நடைப்புதல்வனை” என்று ஐங்குறுநூறுச் சுட்டுகிறது.

  தம்முடைய குழந்தையை வளர்த்த முறையைப் பற்றி பல வருடங்கள் கழித்து
பிறரிடமோ அல்லது குழந்தையிடமோ கூறும் தன்மையை

“இன்னகை முருவல் ஏழையைப் பலநாள்
கூந்தல் வாரி நுசுப்பிவர்ந்து ஓம்பி
நலம் புனை உதவியும் உடையன் மன்னே”

என்று நற்றாய் தலைவன் கேட்கும்படி கூறியதாக அகநானூறு வரிகளில் அறிய முடிகிறது.

 குழந்தை அழும்போது அதனை அமைதிப்படுத்த விளையாட்டு காட்டுவர். குழந்தை அழுகிறது அக்குழந்தையின் வீட்டில் வளர்க்கப்படும் குரங்கு ஒன்று ஒளிவிடும் முத்துக்களை கிளிஞ்சலுக்குள் செலுத்தி கிலுகிலுப்பையாக மாற்றி குழந்தையின் அழுகையை நிறுத்திய காட்சியை,

 “மகா அர் அன்ன மந்திமடவோர்
அர் அன்ன நளிநீர் முத்தம்
வாள்வாய் எருத்தின் வயிற்றகத் தடக்கி
உமட்டியர் ஈன்ற
கிளர்பூண் புதல்வரொடு கிலுகிலியாடும்.”

என்ற சிறுபாணாற்றுப்படை பாடல் மூலம் அறியலாம்.

குழந்தையின் தாயார் குழந்தையின் செயல்களைப் பாராட்டிப் பேசியது
மட்டுமல்லாது, திங்களாகிய குழவியைத் தன் மகனுடன் விளையாட வரவேண்டுமென்று அழைத்து தன் மகனுக்கு அம்புலியைக் காட்டி மகிழும் தலைவியின் மகிழ்வை,

“திங்கள் குழவி வருகென யான் நின்ன
அம்புலி காட்டல் இனிது”
எனக் கலித்தொகைப் பாடலும் காட்டுகின்றது.

 குழந்தைகள் எப்போதும் விளையாடிக் கொண்டேயிருப்பார்கள். அவர்கள்
சிறு தேர்களை உருட்டியும், சிறுபறை கொட்டியும், விளையாடுகிறார்கள் இதனை,
“பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின்
கண்ணகத் தெழுதிய குரீஇப் போல”
என்று நற்றிணையும் தெளிவாக்குகிறது.

 குழந்தைகள் சிறுதேர்களை உருட்டி விளையாடும் போதே,தாமே அவற்றின் மீது ஏறிச்செல்வது போன்ற நிலையை உணர்கின்றனர். இதனை,

“தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்து இன்புறா அர் ஆயனும் கையின் ஊர்ந்து இன்புறா அர் ஆயனும் கையின் ஊர்ந்து இன்புறா அர் ஆயனும் கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர்”
இது குறுந்தொகை வெளிப்படுத்தும் பாங்கு.

  குழந்தைப் பருவத்திலேயே வீரம் செறிந்தவர்களாக விளங்கும் வீரர்களைப் பற்றிய செய்திகளைப் புறநானூற்றில் காண முடிகிறது,
“ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே ஆங்கோர்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”

 ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்தல் தாயின் கடமை என்றும், கல்வி,
அதற்குரிய அறிவு முதலியவற்றால் நிறைந்தவனாக ஆக்குதல் தந்தையின்
கடமையென்றும், படைக்கலம் செய்து கொடுப்பது கொல்லனுடைய கடனென்றும், வேலைக் கையில் ஈந்து அவனைப் படைவீரனாக மாற்றுவது வேந்தனின் கடனென்றும், போர்க்களத்தில் மதயானைகளை வெட்டி வீழ்த்தி வெற்றியுடன் திரும்ப வேண்டியது வீரனின் கடனென்றும் இப்பாடல் கூறுகின்றது.

 சங்க காலத்தில் அரசர்கள் மறவர்களின் வீரத்தாலேயே அரசாட்சி நடத்தி
வந்தனர். மேலும் போர்க்கல்வி (அல்லது) போர்ப்பயிற்சி அக்காலத்தில் முதன்மை பெற்று விளங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. புறப் பொருள் பற்றிப் பாடப்பட்டுள்ள புறநானூற்றில் போருக்குச் சென்று வீரம் விளைவித்த சிறார்களின் மனவுறுதியானது சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது.

 “இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று,மயங்கி
வேல் கைக் கொடுத்து,வெளிது விரித்து உடீஇ
பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச்செல்க - என விடுமே”

 முதல் நாள் போரில் தமையனையும்,மறுநாட் போரில் தலைவனையிழந்தும், மனந்தளராத்தாய் தனதுஒரே மகனுக்குப் போர்க்கோலம் செய்வித்து செருக்களத்திற்கு அனுப்பும் காட்சியையும் புறப்பாடல் விளக்குகிறது.
 “சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி
வாடு முலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்கே”

 புறமுதுகு காட்டா மேன்மையுடைய வீரனின் தாய் தன் மகனின் சிறப்பைக் கண்டபோது அவளுடைய வாடிய மார்பகங்கள் பாலூறிச் சுரந்தன.

திருவள்ளுவர் பார்வையில் குழந்தை:
 உலகெலாம் வாழ ஒரு நூல் செய்த திருவள்ளுவர் இந்தச் சமுதாய அடிப்படை
நெருக்க உறவின் மீது தான் தம்முடைய அறிவுக் கருவூலத்தைச் செம்மையுடன்
தெளிவாக நிறுவியுள்ளார். வள்ளுவரின் ஒவ்வொரு சிந்தனையும் பளிங்கு போலத் தமிழ் பண்பாட்டு, மரபு, குறிக்கோள்களை எடுத்துக்காட்டும் தனிச் சிறப்புடன் விளங்கி வருகிறது.

தமிழ்ச் சமுதாயத்திற்கு நல்ல மருந்தாகவும் பயன்பட்டு தமிழர்களின் வாழ்வைச் செழிப்பாக்கவும் இது உதவுகிறது என்றால் மிகையாகாது. திருவள்ளுவர் புதல்வரைப் பெறுதல் என்னும்ஓர் அதிகாரத்தைத் தனியே வகுத்து மக்கட்பேற்றின் சிறப்பை உணர்த்துகிறார். அறிவறிந்த மக்கட்பேறு, பண்புடைய மக்கட்பேறு எனக் குழந்தையின் இன்றியமையாமை குறித்து விளக்கிச் செல்கிறார்.

“பெறும் அவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
 மக்கட்பேறு அல்ல பிற”

அறிவுடைய பிள்ளைகளைப் பெறுவது ஒருவர் பெறக்கூடிய பதினாறு பேறுகளுள் சிறந்ததாகும். மற்றப் பேறுகள் என்பவை அவ்வளவு சிறந்தவைகளல்ல என்ற வள்ளுவரின் கூற்று இங்கு நினைவுகூரத்தக்கது.

 அறிவென்பது ஆற்றல் மிகுந்த ஆயுதம், பண்பாடு அதைப் பாதுகாக்கும் உறை.
பண்பாடு சேராத அறிவானது வாழ்வையும், சமுதாயத்தையும் அழிக்கும். எனவே குழந்தைகள் பண்பாடு நிறைந்தவர்களாக வளர்க்கப் படவேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவ்வப்போது அறிவுரை மற்றும் பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

பேற்றோர் பண்பாட்டுடன் வாழ்ந்தால்தான், குழந்தைகள் அவர்களின் அறிவுரைகளை மதிப்பர். எனவே பழிசெய்வதில் இன்பம் காணாத நல்ல பண்புகளை உடைய பிள்ளைகளைப் பெறுபவனுக்கு ஒரு பிறவியிலும் தீமை வராது.

“எழு பிறப்பும் தீயவை தீண்டா, பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்”

பிறர் பழி கூறாத பண்புடைய பிள்ளைகளை பெறும் பெற்றோர்க்கு எப்பிறவியிலும் தீமை வந்து சேரா என்ற குறளின் கருத்து பெற்றோர்க்கு அறிவுரையாய் அமைந்துள்ளது.

பெற்றோரின் மறுபதிப்பே அவர்தம் குழந்தையின் அறிவும் பண்பும் செயல் புரியும் தன்மையும் பெற்றோர்களிடமிருந்து பெறுவது. சமுதாயத்திற்கு அவர்கள் கொடை அதுபோல் தீ பண்போ, நல்ல பண்போ குடும்பத்தில் தலைமுறை தோறும் விடாமல் தொடரும் என்ற முன்னெச்சரிக்கையோடு குழந்தைகளை கண்டிப்புடன் நற்பண்பும் நற்செயலும் உடையவர்களாக வளர்ப்பது அவசியம். குழந்தைகளுக்குப் பணத்தைச் சேகரித்து வைப்பதைவிடப் பண்பைச் சேகரிக்கப் பயிற்சியளிப்பது மிகவும் முக்கியமானதாகும்.

 “தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
தம் வினையால் வரும்”

குடும்ப பண்புகள் பெற்றோர் மூலமாகக் குழந்தைகளுக்குச் சேர்வதால் குழந்தைகளே அவர்களின் நிலையான செல்வம். பெற்றோhகள் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய குழந்தைகள் செல்வங்கள் ஆவர். அந்தக் குழந்தைகள் அறிவார்ந்தவர்களாக இருப்பதும் இல்லாதிருப்பதும் பெற்றோர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து அமையும்.

எனவே, குழந்தைகளுக்குப் பணம்,பொருள்,சேகரிப்பதைவிட பண்பைச் சேகரிக்கப் பயிற்சியளிப்பது மிகவும் முக்கியமானதாக வள்ளுவர் கருதுகிறார்.பெற்றோர்களின் கவலைகளைப் போக்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் திறன் குழந்தைகளின் மழலைக்கு உண்டு.

 “குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
 மழலைச் சொல் கேளாதவர்”

 குழலும், யாழும் இனிமையைச் சுரக்கும் கருவிகளாகும். ஆனால் தனது குழந்தையின் மழலை மொழியைக்கேட்ட பிறகு குழல், யாழ், இசையின் இனிமை ஒரு பொருட்டாகவே இருக்காது என்கிறார் வள்ளுவர். பெற்றோர்களின் கவலைகளைப் போக்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் திறன் குழந்தைகளின் மழலை மொழிக்கு உண்டு.

 உலகில் பொருளென்று கூறப்படும் யாவையும் தம்பொருள் என்றும் உரைத்திட
முடியாது. ஆனால் தனது உயிர், தனது உணர்வு, தனது உரு ஆகிய அனைத்து
இயல்பும் குழந்தையிடமே காணப்படுவதால் குழந்தைகளைத் தம்பொருள் என்று அழைக்கலாம்.

 தவமிருந்து பெற்ற குழந்தை என்பார்கள். உண்மையில் அதற்கும் ஒரு தவம்
செய்திருக்க வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதென்பது ஒரு கலை. ஆதைப்பற்றியெல்லாம் வள்ளுவர் பேசவில்லை. வாழ்வின் முற்பகுதியில் மழலை, ஆடல், பாடல் முதலியவற்றால் மகிழ்வித்தும், மடியில் தவழ்ந்தும், தோளில் கிடந்தும், தரையில் நீந்தியும் நமது நெஞ்சையள்ளும் காட்சிகளை நினைவுபடுத்துகிறார். பின்னர் வாழ்வின் பிற்பகுதியில் அறிவுடைய மகனாய் வளர்ந்து பெருமையளிக்கும் சிறப்பையும் உணர்த்துகிறார்.

 தம் மக்கள் அறிவுடையோராய் விளங்குதல் தந்தைக்கு மாத்திறம் இனிமை
என்றில்லை. மாநிலத்தில் மண்ணுயிர்க் கெல்லாம் இன்பமூட்டும் செய்தி அது. அறிஞன் ஒருவனை உலகிற்களித்த பெருமை தந்தைக்கு உண்டு. உணர்வின்பம் என்பது பெற்ற தாய்க்கும் உண்டு. ஈன்ற பொழுதில் தோன்றிய மகிழ்ச்சி இயற்கையானது என்றாலும் மகனைச் சான்றோர் என்று பிறர் வாயால் கேட்டபோது தான் பூரணமாக உணர்கிறான்.  பெற்ற இன்பம் அன்றுதான் ஏற்பட்டதாக மகிழ்ச்சி அடைகின்றார்.

“மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை
 என் நோற்றான் கொல்”
 எனும் சொல் தன்னை ஆளாக்கி விட்ட பெற்றோர்க்கு மகன் செய்யும் கைம்மாறு வேறென்ன இருக்க முடியும்? இவன் தந்தை இவனைப் பெற என்ன தவம் செய்தாரோ? என்று உலகம் புகழ்ந்து உரைக்கும் இனிய மொழிகளைக் கேட்டு அகம் மகிழ்வர்.

 “தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.”

பெற்ற குழந்தைகளிடம் பெற்றோர்க்குச் சில கடமைகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது அவர்களுக்கு நல்ல கல்வி அளிப்பதாகும். குழந்தைகளுக்கு அமுதூட்டிப் பராமரித்து வளர்த்தல் தாயின் கடமை என்றால் அவர்களைக் கல்வியில் சிறந்தோனாக்கி, கற்றோர் அவையில் சிறப்புடன் வீற்றிருக்கச் செய்தல் தந்தையின் கடமையாகும்.  பிள்ளைகளைப் பெறுகின்ற தந்தை அவர்களுக்குத் தேவையான கல்வியை அளித்து சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தை அவர்களுக்குப் பெற்றுத் தருவது அவசியம்.

 இன்றைய சிறுவரை நாளைய சிறந்த குடிமக்களாக மாற்றும் அற்புத ஆற்றல் பெற்றது சிறுவர் இலக்கியம் என்பார் பூவண்ணன். குழந்தைகளை நன் மக்களாய் உருவாக்கும் இலட்சிய நோக்குக் குழந்தை இலக்கியத்திற்கு இருக்கிறது. குழந்தை இலக்கியம் குழந்தைகளின் முகமலர்ச்சியையும், மனமகிழ்ச்சியையும் வெளிகாட்டுவதாக அமைய வேண்டும் என்பர்.

 மேலும் தாய்மொழித் திறன்களை வளர்க்க உதவுகிறது. குழந்தைகளுக்கு விலங்குகள், பறவைகள், நாட்டுத் தலைவர்கள், குறித்து எழுதுவதை விடுத்து குழந்தைகளின் உணர்வுகளையும், எண்ணங்களையும் வெளிப்பட எழுத வேண்டுவது அவசியம். குழந்தைகள் விரும்பி கேட்கக் கூடிய அதிகம் பேசக்கூடிய இலக்கியங்களை உருவாக்க முன் வரவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com