

கொழும்பு, நவ.20- இலங்கை அம்பாந்தோட்டையில் திறக்கப்பட்டுள்ள சர்வதேச துறைமுகத்துக்கு அதிபர் மஹிந்த ராஜபட்ச பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந் துறைமுகத்தின் திறப்பு விழாவில் அதிபர் ராஜபட்ச, அமைச்சர்கள் தயாஸ்ரீ திசேரா, ரோஹித அபேகுணவர்த்தன, நாடாளுமன்றத் தலைவர் சமல் ராஜபட்ச உட்பட எம்.பி.,க்களும் வெளிநாட்டு தூதர்களும் கலந்துகொண்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தற்போதைய நிலையில், 3 கப்பல்களை நங்கூரமிட்டு நிறுத்த முடியும் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.