மதுரை, ஏப்.16: மதுரை சிறை வளாகத்தில் சிறைக் கைதிகளுக்கு இசைப் பயிற்சி இன்று காலை தொடங்கி வைக்கப்படுகிறது.
சிறை வாசிகள் சுய தொழில் பெறுவதற்கு வகை செய்யும் வகையில் பல்வேறு கைத் தொழில்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, சிறைவாசிகளுக்கு இசைப் பயிற்சி தரப்பட்டு, அவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் இசைக் குழு உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை மதுரையில் சிறைவாசிகளுக்கு இசைப் பயிற்சியினை முறைப்படி சிறைத்துறை அதிகாரிகள் தொடங்கிவைத்தனர். இசை மூலம் மனதில் நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.