மதுரை, ஏப்.16: திமுக கட்டுப்பாட்டுடன் உள்ளது என்றார் மு.க.ஸ்டாலின்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனைப் பார்ப்பதற்காக இன்று காலை சிறைக்கு வந்திருந்த மு.க.ஸ்டாலின், அவரைப் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் சிறைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, இரு தினங்களுக்கு முன்னர் மதுரையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை பற்றியும், அதில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணித்தது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், திமுக இப்போதும் கட்டுப்பாட்டுடன் உள்ளது. திமுகவில் தொண்டர்களே முக்கியம். அந்தக் கூட்டத்துக்கு அனைத்து தொண்டர்களும் வந்திருந்தனர். அதுதான் முக்கியம் என்று கூறினார் மு.க.ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.