சட்டசபையில் இடம் ஒதுக்கிய விவகாரம்: தேமுதிக வெளிநடப்பு

சென்னை, ஏப்.17: தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்காக அறை ஒதுக்கிய விவகாரத்தில் எழுந்த வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சியான தேமுதிகவுக்கு (விஜயகாந்த்துக்கு) ஒதுக்கப்பட்ட அறையில் க
Updated on
1 min read

சென்னை, ஏப்.17: தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்காக அறை ஒதுக்கிய விவகாரத்தில் எழுந்த வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சியான தேமுதிகவுக்கு (விஜயகாந்த்துக்கு) ஒதுக்கப்பட்ட அறையில் காங்கிரஸுக்கும் இடத்தைப் பகிர்ந்து ஒதுக்கியதால், தேமுதிகவினர் பெரும் அதிருப்தி அடைந்தனர். இதனால் சபையில் இன்று இந்தப் பிரச்னையை எழுப்பிய தேமுதிகவினருக்கும் ஆளும் தரப்புக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தேமுதிகவினர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்து வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

இதனிடையே, தேமுதிகவினரின் பேச்சுகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com