மதுரை, ஆக. 3: மதுரை கருமாத்தூர் அருகே சிந்துப்பட்டி போலீஸ் சரகத்தைச் சேர்ந்த பெரியவாகைகுளம் பகுதியில் வசிப்பவர் காட்டுராஜா. இவரது மகள் ஜெயலட்சுமி (8) இரண்டாம் வகுப்பு மாணவி. கருமாத்தூரில் ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் இவர், வழக்கமாக கார்த்திகைப்பாண்டி என்பவரின் ஆட்டோவில் ஏறி பள்ளி சென்று திரும்புவது வழக்கமாம். இன்று மாலை பள்ளியில் இருந்து திரும்பியவர், ஆட்டோவில் இருந்து இறங்கி முன்னேயே நின்றுள்ளார். இதை கவனிக்காத ஆட்டோ டிரைவர் வண்டியை எடுக்க ஆட்டோ மோதி ஜெயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.