ஊராட்சி மன்றத் தலைவர் தோட்டத்தில் எரிந்த நிலையில் பெண் உடல்: போலீஸார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வீரசோழபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பி.பிரபுவுக்குச் சொந்தமான தோட்டத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம் கிடந்தது.
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வீரசோழபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பி.பிரபுவுக்குச் சொந்தமான தோட்டத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம் கிடந்தது.

இவரது வீட்டுக்கு சற்று தொலவில் சாலையை ஒட்டிய தோட்டத்தில், பெண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் தரப்பட்டது. இதை அடுத்து இன்று காலை போலீஸார் விரைந்து எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றினர். சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சாலையை ஒட்டி அமைந்த தோட்டம் என்பதால் மர்ம நபர்கள் இதனைச் செய்திருக்கலாம் என்றும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டிருப்பதாகவும் வெள்ளக்கோவில் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com