மக்கள் பிரச்னைகளைப் பேசியதற்கு வழக்கா? விஜயகாந்த் ஆவேசம்

இன்று காலை நாமக்கல் நீதிமன்றத்தில் விஜயகாந்துக்கு எதிராக அரசு தொடர்ந்து அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வந்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
மக்கள் பிரச்னைகளைப் பேசியதற்கு வழக்கா? விஜயகாந்த் ஆவேசம்
Updated on
1 min read

இன்று காலை நாமக்கல் நீதிமன்றத்தில் விஜயகாந்துக்கு எதிராக அரசு தொடர்ந்து அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வந்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,

மக்கள் நலப் பிரச்னைகளைப் பேசியதற்காக அரசு என் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளது. மக்கள் நலப் பிரச்னைகளைப் பேசியதற்கு வழக்கா? இந்த அரசு விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு வரவில்லை. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள இந்த அரசு பழக வேண்டும். என் மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளைப் போட்டிருக்கிறார்கள். அவற்றை நான் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.

விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதுதான் நல்ல அரசுக்கு அழகு. இந்த அரசின் மீதான என் விமர்சனங்கள் இனி அதிகரிக்கும் என்றார் விஜயகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com