மதுரை, ஜூலை 9: மதுரையில் தியாகி வைத்தியநாத ஐயர் ஹரிஜன மக்களை அழைத்துக் கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்து ஆலயப் பிரவேச போராட்டம் நடத்தியதன் 74ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
இதில், மதுரை ஹரிஜன சேவா சங்க குழந்தைகளுடன் குமரி அனந்தன், வைத்தியநாத ஐயரின் பேத்தி மைதிலி சங்கரன், லட்சுமி காந்தன் பாரதி உள்ளிட்டோர் கோவிலுக்குச் சென்று, இந்த நிகழ்வை நினைவு கூர்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.