‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கேரள மாநில கழிவுகளைக் கொட்ட வந்த வேன் பொள்ளாச்சியில் பிடிபட்டது

பொள்ளாச்சி, ஜூலை 20: பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி என்ற இடத்தில் பாலத்தின் அருகே இன்று காலை சந்தேகத்துக்கு இடமான வகையில், கேரள மாநில பதிவு கொண்ட சரக்கு வேன் ஒன்று நின்றிருந்தது. அதில் இருந்து கழிவுகள்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:30 pm

பா. இளையபதி

பொள்ளாச்சி, ஜூலை 20: பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி என்ற இடத்தில் பாலத்தின் அருகே இன்று காலை சந்தேகத்துக்கு இடமான வகையில், கேரள மாநில பதிவு கொண்ட சரக்கு வேன் ஒன்று நின்றிருந்தது. அதில் இருந்து கழிவுகள் அருகே கொட்டப்பட்டிருந்துள்ளது. உள்ளூர் விவசாயி ஒருவர் சந்தேகப்பட்டு விசாரித்த போது, கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் இருந்து வந்த வேன் என்றும், கழிவுகளைக் கொட்டுவதற்காக வந்ததாகத் தெரிய வந்ததை அடுத்து, போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வேன் ஓட்டுநரைக் கைது செய்து வேனைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.