மதுரை, ஜூன் 16: மதுரையில் பொதுமக்கள் குறை கேட்பு முகாம் ஒன்றை போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர். இன்று காலை முதல் சென்னை தல்லாகுளம் பிடிஆர் மகாலில் நடக்கும் இந்தக் குறைகேட்பு முகாமுக்கு ஆணையர், துணை ஆணையர், போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். போக்குவரத்து தொடர்பான ஆலோசனைகள் இதில் கேட்கப் படுகின்றன.
இந்நிலையில் மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடம் ஆலோசனை முகாம் ஒன்றும் நடத்தப்படுகிறது. இருப்பினும் மாநகராட்சியுடன் இணைந்து போலீஸாரும் செயல்பட்டால் குறை கேட்பு முகாம் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றனர் பொதுமக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.