துரை தயாநிதி தலைமறைவு: அழகிரி மருமகனிடம் விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரியின் மகன் துரை தயாநிதி தலைமறைவாக இருப்பது குறித்து மருமகன் வெங்கடேஷிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.
Updated on
1 min read

நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரியின் மகன் துரை தயாநிதி தலைமறைவாக இருப்பது குறித்து மருமகன் வெங்கடேஷிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.

ஒலிம்பஸ் கிரானைட் முறைகேடு புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பஸ் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்த துரை தயாநிதி உள்ளிட்டோரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, துரை தயாநிதி தலைமறைவானார்.

அவரைத் தேடி தனிப்படை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. துரை தயாநிதியின் இருப்பிடத்தை அறிவதற்காக அவருடைய உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று அழகிரி மகளின் கணவர் வெங்கடேஷ், இன்று மதுரை எஸ்.பி.அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com