மதுரையில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் புரளி என்று தெரிய வந்துள்ளது.
மதுரையில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் இன்று காலை தொலைபேசியில் அழைப்பு வந்தது.
இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர், மடத்தை தீவிரமாக சோதனை செய்தனர். எங்கும் வெடிகுண்டு கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்த தகவல் வெறும் புரளி என்று தெரிய வந்தது. அந்த தொலைபேசி அழைப்பினை செய்தது யார் என்று போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.