மதுரையில் கிரானைட் முறைகேடு வழக்கில் தலைமறைவாக உள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் இருப்பிடம் தொடர்பாக மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இன்று காலை மதுரை எஸ்.பி. அலுவலகத்துக்கு முன்னாள் துணை மேயர் மன்னனை அழைத்து வந்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். கிரானைட் முறைகேடு தொடர்பாகவும், தலைமறைவாக உள்ள துரைதயாநிதி குறித்தும் அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.