மதுரை, செப்., 01 : பிஆர்பி நிறுவனத்துக்கு எதிராக 10 காவலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் இன்று மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியத்திடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில், மதுரையில் இருந்து திருவாதவூர் செல்லும் வழியில் உள்ள புது தாமரைப்பட்டி என்ற பகுதியில் கட்டப்பட்ட தங்களது வீடுகள், பிஆர்பி நிறுவனத்தினர் சுரங்கங்கள் தோண்டியதால் இடிந்து விழுந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இதில், 1997ம் ஆண்டு தமிழக அரசு அப்பகுதியில் காவல்துறையினருக்கு நிலங்களை ஒதுக்கியதாகவும், அதில் தாங்கள் கட்டிய வீடுகள், கட்டிய சில காலத்திலேயே இடிந்து விழுந்து விட்டதாகவும் 10 காவல்துறையினர் புகார் அளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.