நாமக்கல், செப்., 24 : நாமக்கல்லில் இன்று காலை ஈரோடு சாலையில் ஆதி தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். இந்த நிலையில், அங்கு சாலை ஓரமாக, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக பழுதாகி நின்றிருந்தது. அது திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேருந்துக்கு தீ வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.