பக்தர்கள் கூட்டம்: மதுரை தேர் தாமதம்

மதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் துவங்கியது. லட்சக் கணக்கில் பக்தர்கள் மாசி வீதிகளில் குவிந்ததால், தேரோட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Updated on
1 min read

மதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் துவங்கியது. லட்சக் கணக்கில் பக்தர்கள் மாசி வீதிகளில் குவிந்ததால், தேரோட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்புக்கு முற்பகல் 11.15 மணி அளவில்தான் தேர் வந்தது. ஒரு மாசி வீதியைக் கடப்பதற்கு சுமார் 2 மணி நேரம் ஆனது. மேலும், இன்று காலை ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாகவும் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அது சரிசெய்யப்பட்டது.

இதனிடையே மதுரை சர்வேயர் காலனி பகுதியில் எழுந்தருளிய கள்ளழகருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com