மதுரை அருகே சோழவந்தானில் 16 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சப்பாணியம்மாள். இவரது மகள் முனீஸ்வரி அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், இன்று காலை அவர் வைகை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். தற்போது, சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆழமான பகுதிக்குச் சென்ற முனீஸ்வரி தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாராம். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் முனீஸ்வரியின் சடலத்தை மீட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.