விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியை சேர்ந்தவர் கோஷ் என்பவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட சீட் வாங்கித்தர கேட்டு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரனிடம் ரூ.32 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அவர் இடம் வாங்கி தராததோடு பணத்தையும் திருப்பி தரவில்லை என அருப்புக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திடீரென காணாமல் போன கோஷ் மதுரை அரசு மருத்துவமனையில் காயங்களுடன் கோஷ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.