சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரேஷன் கடையில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக விற்பனையாளர் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் சேலம் மண்டல இணைப் பதிவாளர் வெ.லட்சுமி, கடந்த சில நாள்களாக சேலம் மாவட்டம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் சார்பில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி, ஓமலூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நடத்தப்படும் எப்.பி. 002 என்ற எண்ணுள்ள கடைக்கு சனிக்கிழமை சோதனைக்காக சென்றுள்ளார்.
அப்போது கடைக்கு வெளியே நின்றிருந்த விற்பனையாளர் தனலட்சுமி, கடைக்கான சாவி தன்னிடம் இல்லை என்று பொறுப்பற்ற முறையில் பதில் கூறியதாகத் தெரிகிறது. மேலும் இந்த கடையில் முறைகேடுகள் ஏராளமாக நடைபெறுவதாக அக்கம் பக்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் கடையில் உள்ள பொருள்களை ஆய்வு செய்ததில் இருப்பு குறைவாக இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து விற்பனையாளருக்கு ரூ.2,200 அபராதம் விதித்ததுடன் அவரை தாற்காலிக பணி நீக்கம் செய்தும் இணைப் பதிவாளர் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா

தில்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைவு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

