விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து 5 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்து 5 சரவன் நகை மற்றும் ரொக்கம் ரூ.4630 ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை
Updated on
1 min read

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்து 5 சரவன் நகை மற்றும் ரொக்கம் ரூ.4630 ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

விருதுநகரில் உள்ள கணேஷ்நகரைச் சேர்ந்தவர் திருப்பதி(45). இவர் கடந்த 13-ம் தேதி அருகில் உள்ள தனது சொந்தக் கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்றாராம். அங்கிருந்து புதன்கிழமை திரும்பி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டை திறந்த பார்க்கையில் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் உள்ளே நுழைந்து பார்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.4630 ஆகியவைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இது குறித்து உடனே விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரி்ல் வழக்கு பதிவு செய்து பின்புறமாக கதவை உடைத்து நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com